Sunday 28 February 2010

விசிஷ்டாத்வைதம் நிறுவிய ராமானுஜர்.


சங்கரருக்குப் பின்னால் அவதரித்தவர் ‘ராமானுஜர். இவர் விசிஷ்டாத்வைதம்’ என்ற சித்தாந்தத்தை நிறுவினார். ‘உலகம் மாயை! பிரம்மம் ஒன்றே சத்தியமானது’ என்பது அத்வைத சித்தாந்தம் அதில் சில மாறுபாடுகளைக் கொண்டது விசிஷ்டாத்வைதம். ‘திருமாலே முழுமுதற் கடவுள் என்று போதித்தார் ராமானுஜர். இவர் வைணவத்துக்கு ஆற்றிய திருத்தொண்டுகள் மகத்தானவை.

ஆதியில், ‘தேவலர்கள் என்ற அந்தணப் பிரிவினர் மட்டுமே, விஷ்ணு ஆலயங்களில் அர்ச்சகர்களாக இருந்தனர். அவர்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய ‘பஞ்ச சம்ஸ்காரம்’ என்னும் வைணவ தீக்கையை, திருமாலடியார்கள் அனைவர்க்கும் பொதுவாக்கினார் ராமானுஜர். ‘நாராயண நாமத்தைச் சொன்னால் எவருக்கும் வைகுண்டம் உண்டு’ என்று திருக்கோஷ்டியூர் விமானத்தில் ஏறி நின்று, உலகத்தோர் அனைவர்க்கும் உபதேசித்த கருணையாளர் ராமானுஜர்.


Post a Comment

1 comments:

Thilaga. S said...

ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிய அறிய தகவல்கள்..
படைப்புக்கு மிக்க நன்றி தோழி..!

ஜெய் ஸ்ரீ ராம்..!

Post a Comment