சண்டேசுவரர்...
ஆலய வழிபாடு சண்டேசுவரர்(ரி) வழிபாடுடன் நிறைவு பெறுகிறது. நமது ஆத்மார்த்த பூஜைகளிலும் இந்த வழிபாடே பூஜை முடிவில் செய்யப் படுகின்றது.
சண்டேசுவர் சந்நிதி கர்ப்பகிரகத்தின் இடப்பக்கத்தில் சிறியதோர் இடைவெளி விட்டு அமைக்கப் பட்டிருக்கும். மூலவருக்கு சாத்திய மாலையும், நைவேத்தியமுமே இங்கு பூஜைக்கு உரியவையாகின்றன.
சண்டேசுவரரை(ரி), சண்டிகேசுவரர்(ரி) என்றும் அழைப்பர். இவர் இறைவன் திருவருள் பெற்ற அடியார். எப்போதும் இறைவனின் தியானத்திலேயே அமர்ந்திருப்பவர். இதனால் இவரை நேர்முகப்படுத்தி அருள் பெறுவதற்க்கு இவர் சந்நிதிமுன் மூம்முறை கைத்தாளம் (கைதட்டி) இட்டு இறை தரிசனத்தின் பலனை தருமாறு வேண்டுகிறோம்.
சிலர் சண்டேசுவரர்(ரி) சந்நிதியில் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளில் நூல் எடுத்து போடுவது வழக்கமாகக் காணப்படுகிறது. சிலர் அறியாமையாலும், சிலர் மற்றவர் செய்வதைப் பார்த்து செய்யும் பழக்கத்தாலும் உருவாகிய இந்த தவறான செயலை அறவே அகற்றுதல் வேண்டும்.
சண்டேசுவர் சந்நிதி கர்ப்பகிரகத்தின் இடப்பக்கத்தில் சிறியதோர் இடைவெளி விட்டு அமைக்கப் பட்டிருக்கும். மூலவருக்கு சாத்திய மாலையும், நைவேத்தியமுமே இங்கு பூஜைக்கு உரியவையாகின்றன.
சண்டேசுவரரை(ரி), சண்டிகேசுவரர்(ரி) என்றும் அழைப்பர். இவர் இறைவன் திருவருள் பெற்ற அடியார். எப்போதும் இறைவனின் தியானத்திலேயே அமர்ந்திருப்பவர். இதனால் இவரை நேர்முகப்படுத்தி அருள் பெறுவதற்க்கு இவர் சந்நிதிமுன் மூம்முறை கைத்தாளம் (கைதட்டி) இட்டு இறை தரிசனத்தின் பலனை தருமாறு வேண்டுகிறோம்.
சிலர் சண்டேசுவரர்(ரி) சந்நிதியில் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளில் நூல் எடுத்து போடுவது வழக்கமாகக் காணப்படுகிறது. சிலர் அறியாமையாலும், சிலர் மற்றவர் செய்வதைப் பார்த்து செய்யும் பழக்கத்தாலும் உருவாகிய இந்த தவறான செயலை அறவே அகற்றுதல் வேண்டும்.
