Thursday 7 February 2013

ஸ்ரீ சந்திரன் சுப்ரபாதம்

சூரியனுக்குத் தென்கிழக்கில் சதுரமான
ஆசனமிட்டு சுபக்கிரகமாய் அமர்ந்திருக்கும்
சுந்தரமுகத்தோனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்.

வலக்கரத்தில் கதையும் இடக்கரத்தில்
வரத முத்திரையும் கொண்டு முத்து
விமானத்தில் பவனி வரும்
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

பேரெழிலுக்கு முதன்மையானவனே
புதபகவானைப் புத்ரனாகப் பெற்றவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ஒரு முகம் கொண்ட எழில்
திருமுகத்தோனே மஞ்சள் கலந்த
வெள்ளை நிறத்தில்  அமிர்தமாய்
விளங்குபவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

வெண்ணிற ஆடைப் ப்ரியனே
முத்தை ரத்தினமாக கொண்டவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

வளமான வாழ்வும் சுகபோகமும்
தந்தருளும் சந்திரபகவானே எழுந்தருள்வாய்

இருளில் மிளிர்ந்து இதயத்துள் அமர்ந்து
வளர்ந்தும் தேய்ந்தும் அருள்பவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ஆயுள் விருத்தியை தந்து அற்புத
வாழ்வை தந்து அருள்பவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ஆயிரம் பிறை கண்டு ஆனந்தமாய்
நான் வாழ அருள்புரியும்
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

மனிதனின் ஜாதகத்தில் மாத்துர்காரனாக
நின்று அழகும் ஆடையும் ஆபரணமும் தந்து
அருள்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ரோஹினி ஹஸ்தம் திருவோணம்
நட்சத்திரத்துக்கு அதிபதியானவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

திருப்பதியை ஷேத்திரமாகக் கொண்டு
வெங்கடேசப் பெருமாளை மூர்த்தியாகக்
கொண்டவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ராஜசூய யாகம் செய்து நாராயணனின்
அருள் பெற்று தேஜோமயமாய்
திகழ்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

பத்து குதிரைத் தேரில்
இருசக்கிரங்கள் பூட்டி பவனிவரும்
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

அத்ரி புத்ரனே ஆத்ரேயனே
அமைதியான பார்வை கொண்டவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

பிரதி திங்களும் பௌர்ணமி நாளிலும்
விரதமிருந்து வெண் அலரி மலரால்
அர்ச்சித்து வணங்கிட நலம் உண்டாகும்.

பச்சரிசி பால்சாதம் நிவேதனம் செய்து
சந்ர பகவானுக்குரிய தான்யமான
நெல்லை தானம் செய்திட கார்ய சித்தியாகும்.

மூன்றாம் பிறையில் சந்த்ர தரிசனம்
செய்து வந்தால் ஆயுள் விருத்தியாகும்.

சந்திரனுக்கு உகந்த ஷேத்திரமான திருப்பதி
சென்று ஸ்ரீனிவாசப் பெருமாளை
தரிசித்தால் சர்வ ஜெயம் உண்டாகும்.

சரணம் சரணம் சந்ரபகவானே சரணம்
சரணம் சரணம் சோமனே சரணம்
சரணம் சரணம் லக்ஷ்மி சோதரனே சரணம்
சரணம் சரணம் சந்ரனே நின் பத மலரே சரணம்

சரணம் சரணம் சந்ரபகவானே சரணம்
சரணம் சரணம் சோமனே சரணம்
சரணம் சரணம் லக்ஷ்மி சோதரனே சரணம்
சரணம் சரணம் சந்ரனே நின் பத மலரே சரணம்





Monday 4 February 2013

ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற....



ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!