Wednesday 29 December 2010

27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்ள்...

அசுவனி

"ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே சுதாகராயை தீமஹி|
தந்நோ அச்வநௌ: ப்ரசோதயாத்||"

பரணி

"ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே தண்டதராயை தீமஹி|
தந்நோ பரணி: ப்ரசோதயாத்||"

கிருத்திகா

"ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி|
தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்||"

ரோகிணி

"ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி|
தந்நோ ரோஹினி: ப்ரசோதயாத்||"

மிருகசீர்ஷம்

"ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி|
ம்ருகசீர்ஷா: ப்ரசோதயாத்||"

திருவாதிரை

"ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி|
தந்நோ ஆர்த்ரா: ப்ரசோதயாத்||"

புனர்பூசம்

"ஓம் ப்ராஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய தீமஹி|
தந்நோ புனர்வஸு: ப்ரசோதயாத்

பூசம்

"ஓம் ப்ரம்மவர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி|
தந்நோ புஷ்ய: ப்ரசோதயாத்||"

ஆயில்யம்
"ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி|
தந்நோ ஆச்லேஷ: ப்ரசோதயாத்||"

மகம்

"ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி|
தந்நோ மக: ப்ரசோதயாத்||"

பூரம்

"ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி|
தந்நோ பூர்வபால்குநீ: ப்ரசோதயாத்||"

உத்தரம்

"ஓம் மஹாபாகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி|
தந்நோ உத்ரபால்குநீ: ப்ரசோதயாத்||"

அஸ்தம்

"ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி|
தந்நோ ஹஜ்தா: ப்ரசோதயாத்||"

சித்திரை

"ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி|
தந்நோ சைத்ரா: ப்ரசோதயாத்||"

சுவாதி

"ஓம் காமசாராயை வித்மஹே மஹாநிஷ்டாயை தீமஹி|
தந்நோ சுவாதி: ப்ரசோதயாத்||"

விசாகம்

"ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி|
தந்நோ விசாகா: ப்ரசோதயாத்||"

அனுஷம்

"ஓம் மிந்த்ரதேயாயை வித்மஹே மஹாமித்ராய தீமஹி|
தந்நோ அனுராதா: ப்ரசோதயாத்||"

கேட்டை

"ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி|
தந்நோ ஜ்யேஷ்டா: ப்ரசோதயாத்||"

மூலம்

ஓம் ப்ரஜாபதிபாயை வித்மஹே மஹா ப்ராஜாயை தீமஹி|
தந்நோ மூலாப்: ப்ரசோதயாத்||"

பூராடம்

"ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி|
தந்நோ பூர்வாஷாடா: ப்ரசோதயாத்||"

உத்திராடம்

"ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி|
தந்நோ உத்ராஷாடா: ப்ரசோதயாத்||"

திருவோணம்
"ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி|
தந்நோ ச்ரோணா: ப்ரசோதயாத்||"

அவிட்டம்

"ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி|
தந்நோ ச்ரவிஷ்டா: ப்ரசோதயாத்||"

சதயம்

"ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி|
தந்நோ சதபிஷக்: ப்ரசோதயாத்||"


பூரட்டாதி

"ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி|
தந்நோ பூர்வப்ரோஷ்டபத: ப்ரசோதயாத்||"

உத்திரட்டாதி

"ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி|
தந்நோ உத்ரப்ப்ரோஷ்டபத: ப்ரசோதயாத்||"

ரேவதி

"ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி|
தந்நோ ரைய்வதி: ப்ரசோதயாத்||"


இந்த நட்சத்திரங்களுக்குரிய காயத்திரி மந்திரங்களைக் கொண்டு தினமும் என்ன நட்சத்திரம் இருக்கின்றதோ அந்த நட்சத்திரத்திற்குரிய வேளையில் அந்த நட்சத்திரத்திற்குரிய காயத்திரி மந்திரத்தை செபித்துவருவது சிறந்த பலனை அன்றைய தினத்தில் கொடுக்கும் என்பது ஐதீகம்.



Monday 20 December 2010

தஷிணாமூர்த்தி வழிபாடு..






தென்முகக் கடவுளாம் தஷிணாமூர்த்தி, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோருக்கு உபதேசம் செய்ய எழுந்தருளிய குருமூர்த்தமாகும்.

அவர் தம் சுட்டு விரலைப் பெருவிரலோடு சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் அகலவிட்டுக் காட்டும் சின்முத்திரையால் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றினையும் அகற்றிக் கடவுளை அடைதல் வேண்டும் என உபதேசிக்கிறார்.

இந்தச் சின்முத்ரை சாதக சின்முத்ரை, சாத்ய சின்முத்ரை, போதக சின்முத்ரை என்று முத்திறப்படும்.

ஸாதக சின்முத்ரா என்பது பெருவிரல் அடியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருந்துவது.

ஸாத்ய சின்முத்ரை என்பது பெருவிரல் மத்தியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருந்துவது.

போதக சின்முத்ரை என்பது பெருவிரல் நுனியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருத்திக் கையை உயர்த்திக் காட்டுவதே இந்தப் போதக சின்முத்ரை எனப்படும்.

ஆதலால் கோவில்களில் தஷிணாமூர்த்தி சந்நிதியில் நாம் இறைவனைக் குருவாய்ப் பாவித்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் போது கீழ்வரும் சுலோகங்களைச் சொல்லி வழிபடலாம்..



"அக்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன சலாகயா
சஷுருன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம:"

"குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம்
நிதயே சர்வவித்யானாம் தஷிணாமூர்த்தயே நம:"

தஷிணாமூர்த்தி காயத்ரி..


"ஓம் தஷிணாஸ்யாய வித்மஹே த்யானரூபாய தீமஹி
தந்நோ போத ப்ரசோதயாத்||"

Wednesday 15 December 2010

இறைவனை அலங்கரிக்க...

வஸ்திரத்தின் தன்மை.

தெய்வங்களுக்கு மிருதுவானதும், கெட்டியானதும், சுத்தமானதுமான அழகான அங்கவஸ்திரம் சாத்தினால் அந்த அங்கவஸ்திரத்தில் எவ்வளவு இழை நூல் இருக்கிறதோ அவ்வளவு வருடத்திற்கு சிவலோகத்தில் வாழும் பாக்கியம் பெறலாம் என்று சிவ தருமம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

பட்டு வஸ்திரம் (ஆடை), பஞ்சு நூலால் தயாரிக்கப்பட்ட வஸ்திரங்கள் போன்றவைகளைக் கொண்டே இறைவனை அலங்கரிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய வஸ்திரத்தை மறுமுறை உபயோகிப்பதாயின் நீரில் நனைத்து காய வைக்காமல் உபயோகிக்கக்கூடாது. சிலர் சலவை செய்துவந்த வஸ்திரத்தை திரும்பவும் நனைக்காமல் பயன்படுத்துகிறார்கள். அது சாஸ்திரத்திற்கு எதிரானது மட்டுமன்றி சாத்துபவருக்கு கெடுதியையும் கொடுக்கும். மேலும் கிழிந்த, பழைய வஸ்திரம் எலி அல்லது பூச்சி கடித்த வஸ்திரத்தைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

முற்பகலில் வெண்மையான வஸ்திரமும் பகலில் சிவப்பு வஸ்திரமும் சாயங்காலத்தில் (மாலையில்) மஞ்சள் வஸ்திரமும் அர்த்தஜாமத்தில் கறுப்பு நீலநிற வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். விசேட தினங்களில் பலவித நிற வஸ்திரங்களைக் கொண்டு அலங்கரிக்கலாம்.

சந்தனம்

சந்தனம், அகில், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் இவைகளுடன் பன்னீர் கலந்த சந்தனத்தையே இறைவனுக்குச் சாத்தவேண்டும்.

ரத்தினங்கள்.

எல்லாவித ரத்தினங்களை தினந்தோறும் சாத்தி அலங்கரித்தாலும் ஒவ்வொரு தினமும் அதற்கான ரத்தினங்களையும் அணிவித்து அலங்கரிப்பதால் அபரிமிதமான சாந்நியத்தை மூர்த்தங்கள் அடைவதாக சுப்ரபேத ஆகமம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.. மேலும்,

ஞாயிறு - மாணிக்கம்
திங்கள் - முத்து
செவ்வாய் - பவளம்
புதன் - மரகதம்
வியாழன் - புஷ்பராகம்
வெள்ளி - வைரம்
சனி - இந்திரநீலம்

இவ்வாறு இறைவனை அலங்கரிக்க வேண்டும் என்றும், அதுவே மிகச்சிறப்பைக் கொடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.



Monday 6 December 2010

ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்திரம்...

ஓம் அஸ்ய ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்யா

யாக்ஞாவல்க்ய ருஷி:

அனுஷ்டுப் சந்த:

ஸ்ரீ சதாசிவோ தேவதா

ஸ்ரீஸதாசிவ ப்ரீத்யர்த்தே

ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர ஜபே விநியோக:


சரிதம் தேவ தேவஸ்ய மஹா தேவஸ்ய பாவனம்

அபாரம் பர்மோதரம் சதுர்வர்கஸ்ய ஜாதனம்


கௌரி விநாயகோ பேதம் பஞ்சவதக்த்ரம் த்ரிநேத்ரகம்

சிவம் த்யாத்வா தசபுஜம் சிவரக்ஷாம் படேந்நர:


கங்கா தரச்சிர; பாது பாலமர்த்தேந்து சேகர

நயனே மதனத்வம்ஸீ கர்ணௌ ஸர்ப்ப விபூஷண:

க்ராணம் பாது புராராதிர்முகம் பாது ஜகத்பதி:

ஜிஹ்வதாம் வாகீச்வர: பாது கந்தாரம் சசிகந்தர:


ஸ்ரீகண்ட: பாதுமே கண்டம் ஸ்கந்தௌ விச்வதுரந்தர

புஜௌ பூபார ஸம்ஹர்த்தா க்ரௌபாது பினாகத்ருத்


ஹ்ருதயம் சங்கர: பாது ஜடாம் கிரிஜாபதி:

நாபிம் ம்ருத்யுஞ்ஜய: பாது கடிம் வ்யாக்ராஜிநாம்பர:


ஸ்க்திநீ பாது தீநார்த்த: சரணாகத வத்ஸல

ஊரூ மஹேஸ்வர: பாது ஜானு நீ ஜகதீஸ்வர


ஜங்கே பாது ஜகத்கர்த்தா குல்பௌபாது கணாதிப:

சரணௌ கருணாஸிந்து: ஸர்வாங்கனி ஸாதாசிவ:


எதாம் சிவபலோபேதாம் ரக்ஷாம் யஸ்ஸுக்ருதீ படேத்

ஸ புக்த்வா ஸகலான் காமான் சிவஸாயுஜ்யமாப்னுயாத்


க்ரஹ பூத பிசாசாத்யாஸ் த்ரைலோக்ய விசரந்தி யே

தூராதாசு பாலாயந்தே சிவநாமாபி ரக்ஷணாத்.


அபயங்கர நாமேதம் கவசம் பார்வதீபதே:

பக்த்யா பிபர்த்திய: கண்டே தஸ்ய வச்யம் ஜகத்த்ரயம்.


இமாம் நாராயணன் ஸ்வப்னே சிவரக்ஷாம் யதாசிசத்

ப்ராதருத்தாய யோகீந்த்ரோ யக்ஞவல்கீய ஸ்ததாலிகத்.


இந்த ஸ்தோத்திரம் மிகவும் அபூர்வமானது. இதற்கு சிவ அபயங்க ஸ்தோத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஸ்தோத்திரத்தை யோகீஸ்வரர் யாக்ஞவல்க்யரின் கனவில் ஸ்ரீமந்நாராயணன் சொன்னதை காலையில் தன் சிஷ்யர்களின் மூலம் பலரும் பயனடையச் செய்தார்.

இந்த ஸ்தோத்திரத்தை சிவ ஆலயத்தில் சிவனுக்கும் அம்பாளுக்கும் எதிரில் நின்று கொண்டு பாராயணம் செய்பவர்களுக்கும் தினம் மாலையில் தங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து இதனைப் பாராயணம் செய்பவர்கள் தனக்கு வேண்டியதை அடைவார்கள். பூத, பிசாசங்கள் நெருங்காது. நவக்ரஹங்களின் பாதகநிலை விலகி எல்லா வசியமும் ஏற்பட்டு கடைசியில் சிவ சாயுஜ்யம் அடைவார்கள் என்றும் இதனைத் தகட்டில் எழுதி கழுத்தில் கட்டிக் கொள்பவனுக்கு மூன்று உலகமும் வசமாகும் என்று ப்ருஹத் ஸ்தோத்ர ரத்னாகரம் என்ற நூலில் விரிவாக கூறப்பட்டு இருக்கிறது.

எல்லா நன்மைகளைப் பெற்று சிவோஹ நிலையை அடைய ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்திரம் பாராயணம் பண்ணி சிவ அருளைப் பிரார்த்திப்போம்.

'ஓம் தத்ஸத்"