Thursday 29 July 2010

பயம் போக்கும் பைரவர்.!

கால பைரவர்...



பைரவரை வழிபட்டால் பிரம்மகத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது. திருமண தடைகள் நீங்கும், அத்துடன் பைரவர் சனிஸ்வரனின் ஆசிரியராவார் அதனால் இவரை வணங்குவதால் சனியின் தொல்லைகள் நீங்கும். எதிரிகள் அழிவர், பில்லி, சூனியம், அகலும். வழக்குகளில் வெற்றிகள் கிட்டும்.

கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி, மற்றும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு உகந்த நாளாகும். அன்றைய தினத்தில் பைரவருக்கு அர்த்தசாம பூஜை மிக விசேஷமானதாகும்.

காசியின் காவல் தெய்வமான கால பைரவர் அவதரித்ததது கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி நாளிலேயே ஆகும்.


சூலமும் , உடுக்கையும், மழுவும், பாசக்கயிறும் கைகளில் ஏந்தியபடி காட்சி தரும் கால பைரவரின் வாகனம் நாய்.

பைரவ காயத்ரி மந்திரம்...

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ; ப்ரசோதயாத்”


மேலும் சில பைரவ அம்சங்களாவன...

அன்ன வாகனத்துடன் காட்சிதருபவர்...
அசிதாங்க பைரவர்.

காளை மாட்டு வாகனத்துடன் காட்சிதருபவர்...
உரு பைரவர்.

மயில் வாகனத்துடன் காட்சிதருபவர்...
சண்ட பைரவர்.

கழுகு வாகனத்துடன் காட்சிதருபவர்...
குரோத பைரவர்.

குதிரை வாகனத்துடன் காட்சிதருபவர்...
உன்மத்த பைரவர்.

யானை வாகனத்துடன் காட்சிதருபவர்...
கபால பைரவர்.

சிம்ம வாகனத்துடன் காட்சிதருபவர்...
பீஷண பைரவர்.






Post a Comment

4 comments:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இப்போது குபேர பைரவர்தான் மாஸ். அவரைப் பற்றி எழுதுங்கள்.

ஈசன் அருள் செய்யட்டும்.

- ஜெகதீஸ்வரன்.

http://sagotharan.wordpress.com/

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அழகு!

- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

NAGA INTHU said...

அஷ்டதிக்,அஷடகம்,அஸ்டோத்ரம்,அஷ்டபைரவர் என ஒரே சனிபகவான் சம்மந்தமான இடுகையாக உள்ளதே ஏதேனும் விஷேசமா

vpoompalani said...

பைரவர் பற்றி அவருடைய வரலாறு பற்றி சற்று விரிவாக எழுதியிருந்தால் மிகவும் நன்றாகஇருக்கும் தாங்கள் இது பற்றி கட்டாயம் தெரிந்து அறிந்திருக்கலாமென நம்புகிறேன் இக்கலியுகத்தில் பைரவர் வழிபாடு சற்று முக்கியத்துவம் பெற்றுவருவதை தாங்கள் அறியாததல்ல.
வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

Post a Comment