Monday 24 December 2012

குரு என்னைப் பார்ப்பார்

சீடர் ஒருவர் சிறுவயதிலிருந்தே தன் குருவிற்கு சேவை செய்து வந்தார். ஏதோ ஒரு காரணத்தால் அவருக்குக் கண் பார்வை மங்கியது. இருந்தாலும் தொடர்ந்து தன் பணியைச் செய்து வந்தார்.

ஒருநாள் உணவுடன் வரும்பொழுது கால் தவறி விழுந்துவிட்டார். அதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் "ஐயா தங்களுக்குக் கண் தெரியவில்லை. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பணியை நாங்கள் செய்கிறோம்" என்றனர்.

சீடர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. "ஐயா என்னால் என் குருவை தரிசிக்க முடிவதில்லை. ஆனால் அவர் என்னைப் பார்ப்பார் இல்லையா? அவருடைய அருட்பார்வை என்மேல் விழும் இல்லையா? அதற்காககத்தான் இங்கு வருகிறேன்" என அவர் கூறியதைக் கேட்டனர். மற்ற சீடர்கள் அவரது குருபக்தியைப் போற்றினர்.




Post a Comment

1 comments:

RAVINDRAN said...

அற்புதம் அருமை

Post a Comment