Saturday 17 September 2011

6. பழமுதிர்ச்சோலைக் கவசம்.


காப்பு.

நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கன்மால் மருமகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழநிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
சரவண பவனே சட்கோணத் துள்ளுரை
அரனருள்சு தனே அய்யனே சரணம்
சயிலொளி பவனே சடாட்சரத் தோனே
மயில்வா கனனே வள்ளலே சரணம்

திரிபுர பவனே தேவசே னாபதி
குறமகள் மகிழும் குமரனே சரணம்
திகழொளி பவனே சேவற் கொடியாய்
நகமா யுதமுடை நாதனே சரணம்
பரிபுர பவனே பன்னிரு கையனே
தருணமிவ் வேளை தற்காத் தருளே
சவ்வும் ரவ்வுமாய் தானே யாகி
வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே
பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்
தவ்வியே ஆடும் சரவண பவனே

குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
தஞ்சமென் றுன்னைச் சரணம் அடைந்தேன்
கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங்(கு)
அஞ்சலி செய்வதன் அமுதமும் உண்டு
கார்த்திகை மாதர் கனமார்(பு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே
நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்
தவமுடை வீர வாகுவோ(டு) ஒன்பான்
தம்பி மா ராகக் கொண்ட
சம்பிர தாயா சண்முகா வேலா

நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்
கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப்
பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனை
ஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்கத்
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை
அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே
மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்
விமலனும் கேட்டு வேகம தாக
உமையுடன் வந்தினி துவந்து புரிந்து

அயனைச் சிறைவிடென்(று) அன்பாய் உரைக்க
நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்
கௌரி லக்ஷ்மி கலைமக ளுடனே
அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல
ஆறு முகத்துடன் அவதரித்தோனே
சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன்
பங்கமே செய்யும் பானு கோபனும்
சூரனோ டொத்த துட்டர்க ளோடு
கோரமே செய்யும் கொடியராக் கதரை

வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்
ஆறிடச் செய்த வமரர்கள் தமக்குச்
சேனா பதியாய் தெய்வீகப் பட்டமும்
தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெருமானே
திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்
சிறப்புறு பழநி திருவே ரகமுதல்
எண்ணிலாத தலங்களில் இருந்தாடும் குகனே
விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே
அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே
தஞ்சமென்(று) ஓதினர் சமயம் அறிந்தங்(கு)

இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா
கும்பமா முனிக்குக் குருதே சிகனே
தேன்பொழில் பழநித் தேவ குமாரா
காண்பார்த்(து) எனையாள் கார்த்திகே யாஎன்
கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி
அஷ்டலக்ஷ்மி வாழ் அருளெனக்(கு) உதவி
இட்டமாய் என்முன் னிருந்து விளையாடத்
திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே
அருணகிரி தனக்(கு) அருளியதமிழ்போல்
கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய்

தேவராயன் செப்பிய கவசம்
பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட
சஷ்டிக் கவசம் தான்செபிப் போரைச்
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா
வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ்த்திறம் தந்தருள் வோனே
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் தமிழ்தரும் அரனே
சரணம் சரணம் சங்கரன் சுதனே
சரணம் சரணம் சண்முகா சரணம்.

வைரவேல் போற்றி!போற்றி!போற்றி!





5. திருத்தணிக் கவசம்.



காப்பு.

நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

கணபதி துணைவா கங்காதரன் புதல்வா
குணவதி உமையாள் குமரா குருபரா
வள்ளிதெய் வானை மருவிய நாயகா
துள்ளிமயி லேறும் சுப்பிர மணியா
அழகொளிப் பிரபை அருள்வடி வேலா
பழநி நகரில் பதியநு கூலா
திருவா வினன்குடி சிறக்கும் முருகா
அருள்சேர் சிவகிரி ஆறு முகவா
சண்முக நதியும் சராபன்றி மலையும்
பன்முகம் நிறைந்த பழநிக்கு இறைவா

ஆறாறு நூற்று அட்டமங் களமும்
வீரவை யாபுரி விளங்கும் தயாபரா
ஈராறு பழநி எங்கும் தழைக்கப்
பாராறு சண்முகம் பகரும் முதல்வா
ஆறு சிரமும் ஆறுமுகமும்
ஆறிரு புயமும் ஆறிரு காதும்
வடிவம் சிறந்த மகரகுண் டலமும்
தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்தூரமும்
திருவெண் ணீறணி திருநுதல் அழகும்
கருணை பொழியும் கண்ணான்கு மூன்றும்

குனித்த புருவமும் கூரிய மூக்கும்
கனித்த மதுரித்த கனிவாய் இதழும்
வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும்
எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும்
காரிகை உமையாள் களித்தே இனிதெனச்
சீர்தரும் வள்ளி தெய்வநா யகியாள்
பார்த்தழ கென்னப் பரிந்த கபாலமும்
வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும்
முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க
மறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆட

ஈச்வரன் பார்வதி எடுத்துமுத் தாடி
ஈச்வரன் வடிவை மிகக்கண் டனுதினம்
கையால் எடுத்துக் கனமார்(பு) அணைத்தே
ஐயா! குமரா! அப்பனே! என்று
மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக்
கார்த்திகே யாஎனக் கருணையால் கொஞ்சி
முன்னே கொட்டி முருகா! வருகவென்(று)
அந்நேரம் வட்டமிட் டாடி விளையாடித்
தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக்
கூவிய மயிலேறும் குருபரா வருக

தாவிய தகரேறும் சண்முகா வருக
ஏவியவே லேந்தும் இறைவா வருக
கூவிய சேவற் கொடியோய் வருக
பாவலர்க் கருள்சிவ பாலனே வருக
அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக
பொன்போல் சரவணப் புண்ணியா வருக
அழகிற் சிவனொளி அய்யனே வருக
களபம் அணியுமென் கந்தனே வருக
மருமலர்க் கடம்பணி மார்பா வருக
மருவுவோர் மலரணி மணியே வருக

திரிபுர பவனெனும் தேவே வருக
பரிபுர பவனெனும் பவனே வருக
சிவகிரி வாழ்தெய்வ சிகாமணி வருக
காலில் தண்டை கலீர் கலீரென
சேலிற் சதங்கை சிலம்பு கலீரென
இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும்
அடும்பல வினைகளை அகற்றிய பாதமும்
சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும்
நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும்
தங்கரை ஞாணும் சாதிரை மாமணி

பொங்குமாந் தளிர்சேர் பொற்பீதாம் பரமும்
சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும்
மந்திர வாளும் வங்கிச் சரிகையும்
அருணோ தயம்போல் அவிர்வன் கச்சையும்
ஒருகோடி சூரியன் உதித்த பிரபைபோல்
கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும்
இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும்
ஆயிரம் பணாமணி அணியுமா பரணமும்
வாயிலநன் மொழியாய் வழங்கிய சொல்லும்
நாபிக் கமலமும் நவரோக பந்தியும்

மார்பில் சவ்வாது வாடை குபீரென
புனுகு பரிமளம் பொருந்திய புயமும்
ஒழுகிய சந்தனம் உயர் கஸ்தூரியும்
வலம்புரி சங்கொலி மணியணி மிடறும்
நலம்சேர் உருத்திர அக்க மாலையும்
மாணிக்கம் முத்து மரகதம் நீலம்
அணிவை டூரியம் அணிவைரம் பச்சை
பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும்
நவமணிப் பிரபைபோல் நாற்கோடி சூரியன்
அருணோ தயமெனச் சிவந்த மேனியும்

கருணை பொழியும் கடாட்சவீட் சணமும்
கவசம் தரித்தருள் காரண வடிவும்
நவவீரர் தம்முடன் நற்காட்சி யான
ஒருகை வேலாயுதம் ஒருகை சூலாயுதம்
ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம்
ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்பு
ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு
ஒருகை மேற்குடை ஒருகை தண்டாயுதம்
ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம்
அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப்

பங்கயக் கமலப் பன்னிரு தோளும்
முருக்கம் சிறக்கும் முருகா சரவணை
இருக்கும் குருபரா ஏழைபங் காளா
வானவர் முனிவர் மகிழ்ந்து கொண் டாடத்
தானவர் அடியவர் சகலரும் பணியப்
பத்திர காளி பரிவது செய்யச்
சக்திகள் எல்லாம் தாண்டவ மாட
அஷ்ட பயிரவர் ஆனந்த மாட
துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க
சப்த ரிஷிகள் சாந்தக மென்னச்

சித்தர்கள் நின்று சிவசிவா என்னத்
தும்புரு நாரதர் சூரிய சந்திரர்
கும்பமா முனியும் குளிர்ந்ததா ரகையும்
அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள்
நயமுடன் நின்று நாவால் துதிக்க
அஷ்ட லக்ஷ்மி அம்பிகை பார்வதி
கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த
இடும்பா யுதன்நின் இணையடி பணிய
ஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்க
தேவ கணங்கள் ஜெயஜெய என்ன

ஏவற் கணங்கள் இந்திரர் போற்ற
கந்தருவர் பாடிக் கவரிகள் வீசிச்
சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேக
பூதம் அடிபணிந் தேத்தவே தாளம்
பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட
அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க
குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க
குடையும் சேவலின் கொடியும் சூழ
இடை விடாமல்உன் ஏவலர் போற்றச்
சிவனடி யார்கள் திருப்பாத மேத்த

நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம்
உருத்திர வீணை நாதசுர மேளம்
தித்திமி என்று தேவர்கள் ஆடச்
சங்கீத மேளம் தாளம் துலங்க
மங்கள மாக வைபவம் இலங்க
தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம்
சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க
நந்திகே சுவரன்மீது ஏறிய நயமும்
வந்தனம் செய்ய வானவர் முனிவர்
எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர

ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன்
வீரமயி லேறி வெற்றிவேல் எடுத்துச்
சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச்
சிங்கமுகா சுரன் சிரமது உருளத்
துங்கக் கயமுகன் சூரனும் மாள
அடலற்ற சூலத்தை அறுத்துச் சயித்து
விடவே லாயுதம் வீசிக்கொக் கரித்துத்
தம்ப மெனும் சயத் தம்பம் நாட்டி
அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத்
திருப்பரங் குன்றம் சீர்ப்பதி செந்தூர்

திருவாவி னன்குடி திருவே ரகமும்
துய்ய பழநி சுப்பிர மணியன்
மெய்யாய் விளங்கும் விராலி மலைமுதல்
அண்ணா மலையும் அருள்மேவும் கயிலை
கண்ணிய மாவூற்று கழுகுமா மலையும்
முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும்
நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும்
கதிர்காமம் செங்கோடு கதிர்வேங் கடமும்
பதினா லுலகத்திலும் பக்தர் மனத்திலும்
எங்கும் தானவ னாயிருந்(து) அடியார்தம்

பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க
கேட்ட வரமும் கிருபைப் படியே
தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா
நாட்டு சிவயோகம் நாடிய பொருளும்
தாட்டிக மாய்எனக்(கு) அருள்சண் முகனே
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!




4. சுவாமிமலைக் கவசம்.



காப்பு.

நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.


ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே
ஓங்கார மாக உதயத் தெழுந்தே
ஆங்கார மான அரக்கர் குலத்தை
வேரறக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
வேலா யுதத்தால் வீசி அறுத்த
பாலா போற்றி பழநியின் கோவே
நான்கு மறைகள் நாடியே தேடும்
மான்மரு கோனே வள்ளி மணாளனே

நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக்
காணநீ வந்து காப்பதும் கடனே
காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் முதல்வா புனித குமாரா
சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி
ஏகாட் சரமாய் எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதற் பொருளே
துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம்
அதிசய மாக அமைத்தவா போற்றி

திரியட் சரத்தால் சிவனயன் மாலும்
விரிபா ருலகில் மேன்மையுற் றவனே
சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம்
மதுர மாய் அளிக்கும் மயில்வா கனனே
பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால்
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம்
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்
ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
ஆறுசிரமும் அழகிய முகமும்

ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்
சரவணை வந்த சடாட்சரப் பொருளே
அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
கரங்கள்பன் னிரண்டில் கதிரும் ஆயுதத்தால்
தரங்குலைந்(து) ஓடத் தாரகா சுரன்முதல்
வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய்
சீர்திருச் செந்தூர்த் தேவசே னாதிபதி
அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி
இஷ்டசித்திகள் அருள் ஈசன், புதல்வா

துஷ்டசங் காரா சுப்பிர மணியா
மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொள்ளாக் காட்சி காட்டிய சடாட்சர
சைவம் வைணவம் சமரச மாகத்
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி
ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்

தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான்
அர்ச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய்
பில்லிவல் வினையும் பீனிச மேகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கிநின் அன்பரோ(டு) என்னைச்
சல்லாப மாகக் சகலரும் போற்ற
கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
அண்டர் நாயகனே அருமறைப் பொருளே
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிவே தாளம்

சண்டமா முனியும் தக்கராக் கதரும்
மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும்
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு
திட்டு முறைகள் தெய்வச் சாபம்
குட்டல் சோம்பல் கொடிய வாந்தியம்
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்
உன்னுடைய நாமம் ஓதியே நீறிடக்
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை

செய்வதுன் கடனே செந்தில் நாயகனே
தெய்வநா யகனே தீரவே சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!!




3. பழநிக் கவசம்.



காப்பு.

நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.


திருவா வினன்குடி சிறக்கும் முருகா
குருபரா குமரா குழந்தைவே லாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா
இரவலர் தயாபரா ஏழைபங் காளா
பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா
வரமெனக்(கு) அருள்வாய் வாமனன் மருகா
இரண்டா யிரம்வெள்ளம் யோகம் படைத்தவா
திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா
இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன்
பட்சத்துடனே பராசக்தி வேலதாய்

வீர வாகு மிகுதள கர்த்தனாய்
சூரசம் காரா துஷ்டநிஷ் டூரா
கயிலாய மேவும் கனகசிம் மாசனா
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா
அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா
சுகத்திரு முருகாற் றுப்படை சொல்லிய
நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்
கைக்கீழ் வைக்கும் கனகமிசைக் குதவா
திருவரு ணகிரி திருப்புகழ் பாட
இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா

ஆயிரத் தெட்டாம் அருள்சிவ தலத்தில்
பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா
எண்ணா யிரம்சமண் எதிர்கழு வேற்றி
விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா
குருவாம் பிரமனைக் கொடுஞ்சிறை வைத்து
உருப்பொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்
சுருதிமெய் யோகம் சொல்லிய(து) ஒருமுகம்
அருள்பெரு மயில்மீ(து) அமர்ந்தது ஒருமுகம்
வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம்
தெள்ளுநான் முகன்போல் சிருட்டிப்பது ஒருமுகம்

சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம்
ஆரணம் ஓதும் அருமறை யடியார்
தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம்
ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி
திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம
பொருட்செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம
ஏரகம் தனில்வாழ் இறைவா நமோ நம
கூரகம் ஆவினன் குடியாய் நமோ நம
சர்வசங் கரிக்குத் தனயா நமோ நம
உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோ நம

எல்லாக் கிரிக்கும் இறைவா நமோ நம
சல்லாப மாகச் சண்முகத் துடனே
எல்லாத் தலமும் இனிதெழுந் தருளி
உல்லா சத்துறும் ஓங்கார வடிவே
மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை
சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை
வேலா யுதமுடன் விளங்கிடும் குகனைச்
சீலமார் வயலூர் சேந்தனைத் தேவனை
கைலாச மேருவா காசத்தில் கண்டு
பைலாம் பூமியும் பங்கய பார்வதி

மேலும் பகலும் விண்ணுரு வேத்தி
நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை
கங்கை யீசன் கருதிய நீர்புரை
செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி
வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி
ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல்
ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன்
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை

தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு
மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி
அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி
மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர்
பாகமாய் ரதமும் பகல்வழி யாரை
சாகா வகையும் தன்னை அறிந்து
ஐந்து ஜீவனுடன் ஐயஞ் சுகல்பமும்
விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி
சந்திர சூரியர் தம்முடன் அக்கினி
அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச்

சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை
மந்திர அர்ச்சனை வாசிவ என்று
தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்
ஆறு முகமாய் அகத்துளே நின்று
வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து
யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி
மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு
வாலைக் குழந்தை வடிவையும் காட்டி
நரைதிரை மாற்றி நாலையும் காட்டி
உரைசிவ யோகம் உபதேசம் செப்பி

மனத்தில் பிரியா வங்கண மாக
நினைத்த படிஎன் நெஞ்சத் திருந்து
அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி
மதியருள் வேலும் மயிலுடன் வந்து
நானே நீயெனும் லட்சணத் துடனே
தேனே என்னுளம் சிவகிரி எனவே
ஆறா தாரத்(து) ஆறு முகமும்
மாறா திருக்கும் வடிவையும் காட்டிக்
கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க
தனதென வந்து தயவுடன் இரங்கிச்

சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம்
எங்கு நினைத்தாலும் என்முன் னேவந்து
அஷ்டாவ தானம் அறிந்தவுடன் சொல்லத்
தட்டாத வாக்கு சர்வா பரணமும்
இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத்
துலக்கிய காவியம் சொற்பிர பந்தம்
எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம்
வழுத்தும் என்நாவில் வந்தினி திருந்தே
அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும்
சமுசார சாரமும் தானேநிசமென

வச்சிர சரீரம் மந்திர வசீகரம்
அட்சரம் யாவும் அடியேனுக் குதவி
வல்லமை யோகம் வசீகர சக்தி
நல்லஉன் பாதமும் நாடிய பொருளும்
சகலகலை ஞானமும் தானெனக் கருளி
செகதல வசீகரம் திருவருள் செய்து
வந்த கலிபிணி வல்வினை மாற்றி
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக்
கிட்டவே வந்து கிருபை பாலிக்க
அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய்

துட்டதே வதையும் துட்டப் பிசாசும்
வெட்டுண்ட பேயும் விரிசடைப் பூதமும்
வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க
பேதாளம் துர்க்கை பிடாரி நடுநடுங்க
பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி
உதைத்த மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச்
சூலத்தாற் குத்தித் தூளுதூ ளுருவி
வேலா யுதத்தால் வீசிப் பருகி
மழுவிட் டேவி வடவாக் கினிபோல்

தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச்
சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்
மதம்பெறும் காளி வல்ல சக்கரம்
மதியணி சம்பு சதாசிவ சக்கரம்
பதிகர்ம வீர பத்திரன் சக்கரம்
திருவை குண்டம் திருமால் சக்கரம்
அருள்பெருந் திகிரி அக்கினிச் சக்கரம்
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்

ஏக ரூபமாய் என்முனே நின்று
வாகனத் துடன்என் மனத்துள் இருந்து
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்
இம்பமா கருடணம் மேவுமுச் சாடனம்
வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம்
உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடணம்
தந்திர மந்திரம் தருமணி அட்சரம்
உந்தன் விபூதி உடனே சபித்து
கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க
எந்தன் மனத்துள் எதுவேண் டினும்

தந்துரட் சித்தருள் தயாபரா சரணம்
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம்
சரணம் சரணம் சட்கோண இறைவா
சரணம் சரணம் சத்துரு சம்காரா!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!





2. திருப்பரங்குன்றக் கவசம்.




காப்பு.

நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.


திருப்பரங் குன்றுரை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத் துறையுறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப் பொருளே
வையா புரியில் மகிழ்ந்துவாழ் பவனே
ஒய்யார மயில்மேல் உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
பழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
முழுவுடை முதல்வன் முதலாய் நமோ நமோ

விராலி மலையுறை விமலா நமோ நமோ
நாமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ
சூரசம் கார துரையே நமோ நமோ
வீரவே லேந்தும் வேளே நமோ நமோ
பன்னிரு கரமுடை பரமா நமோ நமோ
கண்களீ ராறுடைக் கந்தா நமோ நமோ
கோழிக் கொடியுடை கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சசச சசச ஓம் ரீம்
வவவ வவவ ஆம் ஹோம்

பபப பபப சாம் சூம்
வவவ வவவ களம் ஓம்
லலி லிலி லுலு நாட்டிய அட்சம்
கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக
பக பக பக பரந்தாமா வருக
வருக வருகவென் வள்ளலே வருக
வருக வருகநிஷ் களங்கனே வருக
தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச்

சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே
அல்லும் பகலும் அனுதினம் என்னை
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
வல்லவிடங்கள் வராமல் தடுத்து
நல்ல மனத்துடன் ஞான குருஉனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்து நீ வரங்கள்
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
கந்தா கடம்பா கார்த்தி கேயா
நந்தன் மருகா நாரணி சேயே
எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தவனை

தண்ணளி அளிக்கும் சாமி நாதா
சிவகிரி கையிலை திருப்பதி வேளூர்
தவக்கதிர் காமம் சார்திரு வேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு
சன்னதி யாய்வளர் சரவண பவனே
அகத்திய முனிவனுக்(கு) அன்புடன் தமிழை
செகத்தோர் அறியச் செப்பிய கோவே
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம்

நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாய் நின்ற மெய்ப்பொரு ளோனே
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே
வெற்றிக் கொடியுடை வேளே போற்றி
பக்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி
அத்தன் அரியயன் அம்பிகை லட்சுமி
வாணியுடனே வரையுமாக் கலைகளும்
தானே நானென்று சண்முக மாகத்
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்

பூரணகிருபை புரிபவா போற்றி
பூதலத் துள்ள புண்ணியதீர்த் தங்கள்
ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில்
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்
பண்ணும் நிட்டைகள் பலபல வெல்லாம்
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம்
எள்ளினுள் எண்ணெய்போல் எழிலுடைஉன்னை
அல்லும் பகலும் ஆசா ரத்துடன்
சல்லாப மாய்உனைத் தானுறச் செய்தால்
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி

பல்லா யிரநூல் பகர்ந்தருள் வாயே
செந்தில் நகர்உறை தெய்வானை வள்ளி
சந்ததம் மகிழும் தயாபர குகனே
சரணம் சரணம் சரவண பவஓம்
அரண்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.


1. திருச்செந்தூர்க் கவசம்.



காப்பு.

நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.


சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மைய நடஞ்செயும் மயில்வா கனனார்
கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரிரி
விணபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென

வசர ஹணபக வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயுங் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் நிந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று

உன்றிரு வடியை உறுதியென் றெண்ணும்
என்றலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வே லிரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனிய வேல் காக்க
மார்பை யிரத்ந வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேலிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காரக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க

முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா னாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியேனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
என்பெயர் சொலவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோடப்
படியினின் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
கட்டி யுருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில்செதி லாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீயெனக் கருள்வாய்
ஈரே ழுலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாக

உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழிப் பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்து தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தில்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா விருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

நேச முடன்யான் நெற்றியி லணியப்
பாச வினைகள் பற்றதுநீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புட னிரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அட்டதிக் குள்ளோ ரடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாங் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றென துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.


Friday 26 August 2011

கந்தசஷ்டி கவசம் உருவான கதை..

கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும், நோய் நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.

இந்த கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். தேவராய சுவாமிகள் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா?

தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும்அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை. வாழ்க்கையே வெறுப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார்.

அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.

நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.

அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.

தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த,

'சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்'

என்று தொடங்கும் கவசம்.

இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும்.

முருகனுக்கு உகந்தநாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு. முருகனுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, 'சரவணபவ' என்ற முருகனின் மந்திரம் ஆறெழுத்து, ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு பேன்றவற்றை குறிக்கும்.

இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?

இத்த்னை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடதக்கது.

இனி வரும் பதிவுகளில் ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசத்தை வரிசையாக பார்க்கலாம்.


Tuesday 23 August 2011

எது சிறந்த பக்தி?

துரியோதனனுடன் சூதாடித் தோற்றார் தருமர். பாண்டவர்களின் ராஜ்யத்தைக் கைப்பற்ற, அவர்களைக் கொன்றொழிக்க பல முயற்சிகள் செய்து வந்தான் துரியோதனன். ஆனாலும் பாண்டவர்கள் தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதால் எல்லாச் சூழ்ச்சியிலும் தப்பி, பத்து வருட வனவாசத்தை ஏற்று, காட்டில் வாழச் சென்றார்கள்.

காட்டில் வாழ்ந்து வந்த குந்திதேவி, பாஞ்சாலி, பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் பீமனோ, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவான். இதனால் அவன் பிரார்த்தனையில் பங்குபற்றுவதில்லை.

ஒருநாள் "நீ யானைபோல் பலசாலிதான், ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே. உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று!" என்று கடிந்தார் தருமர். இதன்பிறகாவது நேரத்திற்கு எழுந்து பிரார்தனையில் கலந்து கொள்வான் என்று எண்ணினார் தருமர். ஆனாலும் வழக்கம்போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுவான்.

ஒரு நாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி, "நகுலனை, கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார். நகுலன் திரும்பி வந்து "நாளைக்கு கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு ஒருநாள் தான் அவரால் வரமுடியுமாம்" என்று கூறினான்.

"நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள்" என்று கூறியவாறு அருச்சுனன் நம்பிக்கையுடன் எழுந்து சென்றான். அங்கு சென்ற அருச்சுனனும், நாளை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தான். "என்ன செய்வது, நாளைக்கு எனக்கு வேறு வேலை இருக்கிறதே" என்றார் கிருஷ்ணர். மனம் இடிந்தவனாக,அருச்சுனன் திரும்பினான். அருச்சுனன் போய் அழைத்தும், கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டாரே.. என்று எல்லொரும் கவலையாக இருந்தனர்.

வழக்கம் போல, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த வந்த பீமன், "ஏன் எல்லோரும் என்னவோ போல இருக்கிறீர்கள்?" என்று வினவினான். அப்பொழுது தருமர், "ஒன்றுமில்லை, கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம், அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார்" என்றார். "இவ்வளவுதானா.., நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன்" என்றான் பீமன்.

"நான் போய் அழைத்து வரமுடியாத கிருஷ்ணர்.., நீ கூப்பிட்டு வந்துவிடுவானா.." என்று அருச்சுனன் கிண்டல் செய்தான். பீமன் தனது கதையை (தண்டாயுதம்) தூக்கிக் கொண்டு புறப்பட்டான். போகும்போது "பாஞ்சாலி... நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை" என்று கூறிவிட்டுச் சென்றான்.

சிறிது தூரம் போனபின், தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான்! "கிருஷ்ணா! நீ விருந்துக்கு வருகிறாயா இல்லையா? வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து, நான் என் உயிரை விடுவேன்." என்று உரக்கக் கத்தினான். உடனடியாக கிருஷ்ணர் தோன்றி, பீமனின் தலைக்கு மேலாக விழுந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக்கொண்டார்! பீமனின் அன்பு அழைப்பினை ஏற்று, அவனோடு விருந்திற்கு வந்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும், கேலி செய்தவர் தலை குனிந்தனர்.

பீமனின் பக்திதான் சிறந்தது என்று நிரூபணம் ஆயிற்று. அவன் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தான் அருச்சனன். தினமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாத போதிலும், அவன் பக்தியே தூயதாகவும் தன்னலம் அற்றதாகவும் இருந்தது.



Saturday 16 July 2011

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்.


ஸூமநஸ வந்தித ஸூந்தரி மாதவி
சந்த்ர சகோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாக்ஷிணி வேதநுதே
பங்கஜ வாஸினி தேவஸூ பூஜித
ஸத்குண வர்ஷினி சாந்தியுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஆதிலெக்ஷ்மி ஜெய பாலயமாம்.

ஐகலி கல்மஷ நாசினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரநுதே
மங்கள தாயிணி அம்புஜ வாஷினி
தேவ கணார்ச்சித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தான்யலக்ஷ்மி ஜெய பாலயமாம்.

ஜயவர வர்னினி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸூரகண பூஜிய சீக்ர பலப்ரத
ஞான விகாஸினி சாஸ்த்ர நுதே
பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜநாச்ரித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தைர்யலக்ஷ்மி ஜெய பாலயமாம்.

ஜய ஜய துர்கதி நாசினி காமினி
சர்வ பலப்ரத சாஸ்த்ரமயே
ரதகஜ துர்க பதாதி சமானுத
பரிஜன மண்டித லோகநுதே
ஹரிஹர ப்ரம்ம ஸூபூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஸ்ரீ கஜலக்ஷ்மி பாலயமாம்.

அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி
ராக விவர்த்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷினி
ஸப்த ஸ்வர வர கானனுதே
சகல ஸூராஸூர தேவ முநீஸ்வர
மாநவ வந்தித பாத யுதே
ஜெய ஜெய ஹே மது ஸூதன காமினி
சந்தான் லக்ஷ்மி பாலயமாம்.

ஜய கமலாசனி சத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்ய நுதே
கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித
சங்கர தேசித மான்யபதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
விஜயலக்ஷ்மி ஜெய பாலயமாம்.

ப்ரணத ஸூரேஸ்வரி பாரதி பார்கவி
சோக விநாசினி ரத்னமயே
மணிமய பூக்ஷித கர்ண விபூஷண
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயினி கலிமல ஹாரிணி
காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
வித்யாலக்ஷ்மி பாலயமாம்.

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸூ பூர்ண மயே
கும கும குங்கும் குங்கும் குங்கும்
சங்க நிநாத ஸூவாத் ய நுதே
வேத புராணே திஹாச ஸூ பூஜித
வைதிக மார்க ப்ரதச்ச யுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஸ்ரீ தனலக்ஷ்மி பாலயமாம்.

இதி ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.


Friday 1 July 2011

ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம்.


ஸரஸ்வதீ மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா
ஸ்ரீப்ரதா பத்மநிலயா பத்மாக்ஷி பத்மவக்த்ரகா
ஸிவாநுஜா புஸ்தகப்ருத் ஜ்ஞாநமுத்ரா ரமாபரா
காமரூபா மஹாவித்யா மஹாபாதக நாஸிநீ.

மஹாஸ்ரயா மாலிநீ ச மஹாபோகா மஹாபுஜா
மஹாபாகா மஹோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா
மஹாகாளீ மஹாபாஸா மஹாகாரா மஹாங்குஸா
பீதாச விமலா விஸ்வா வித்யுந்மாலா ச வைஷ்ணவி.

சந்த்ரிகா சந்த்ரவதநா சந்த்ரலேகா விபூஷிதா
ஸாவித்ரீ ஸுரஸாதேவீ திவ்யாலங்கார பூஷிதா
வாக்தேவி வஸுதா தீவ்ரா மஹாபத்ரா மஹாபலா
போகதா பாரதீ பாமா கோவிந்தா கோமதீ ஸிவா.

ஜடிலா விந்த்யவாஸா ச விந்த்யாசல விராஜிதா
சண்டிகா வைஷ்ணவி ப்ராஹ்மீ ப்ரஹ்மஜ்ஞாநைக ஸாதநா
ஸௌதாமிநீ ஸுதா மூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா
ஸுவாசிநீ ஸுநாஸாச விநித்ரா பத்மலோசநா.

வித்யாரூபா விஸாலாக்ஷீ ப்ரஹ்மஜாயா மஹாபலா
த்ரயீமூர்த்திஸ் த்ரிகாலஜ்ஞா த்ரிகுணா ஸாஸ்த்ரரூபிணீ
ஸும்பாஸுர ப்ரமதிநீ ஸுபதாச ஸ்வராத்மிகா
ரக்தபீஜநிஹந்த்ரீச சாமுண்டா சாம்பிகா ததா.

முண்டகாய ப்ரஹரணா தூம்ரலோசந மர்தநா
ஸர்வதேவாஸ்துதா ஸௌம்யா ஸுராஸுர நமஸ்க்ருதா
காளராத்ரீ கலாதாரா ரூபஸௌபாக்ய தாயீநீ
வாக்தேவீ ச வராரோஹா வாராஹீ வாரிஜாஸநா.

சித்ராம்பரா சித்ரகந்தா சித்ரமால்ய விபூஷிதா
காந்தா காமப்ரதா வந்த்யா வித்யாதர ஸுபூஜிதா
ஸ்வேதாநநா நீலபுஜா சதுர்வர்க பலப்ரதா
சதுராநந ஸாம்ராஜ்யா ரக்தமத்யா நிரஞ்ஜநா.

ஹம்ஸாஸநா நீலஜங்க்கா ப்ரஹ்மவிஷ்ணு ஸிவாத்மிகா
ஏவம் ஸரஸ்வதீ தேவ்யா நாம்நாமஷ்டோத்தரம் சதம்.

இதி ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம் சம்பூர்ணம்.


Wednesday 29 June 2011

பரந்தாமனின் தலைவலியும், மருந்தாக பக்தரின் பாத தூசியும்...

அன்று வைகுண்ட ஏகாதசி நாளாகும். பகவான் கிருஷ்ணரைத் தரிசிக்க, துவாரகை வாசிகளும், மகான்களும், மகரிஷிகளும், பக்தர்களும் பெருமளவில் வந்திருந்தார்கள்.

இந்தக் கூட்டத்தைக் கண்ட நாரதர் "ஆகா... எல்லோருக்கும் எத்தகைய பக்தி! உபவாசமிருந்து பகவானைத் தரிசிக்க வந்திருக்கிறார்களே" என்று பெருமிதப்பட்டார். அங்கிருந்த ருக்மிணிகூட அசந்து போனாள். "இவர்களது பக்திக்கு ஈடேது இணையேது... நம்பமுடியவில்லையே" என்றாள்.

இதைக்கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர், மனதிற்குள் சிரித்தார். பக்தியின் உண்மைத் தத்துவத்தை விளக்க வேண்டும் என்று நினைத்தார். பிறகு தனக்கு தாங்க முடியாத தலைவலி இருப்பதாக நடித்தார்! மஞ்சத்தில் படுத்து துடிதுடித்தார். பரந்தாமனுக்கே தலைவலியா என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

மருத்துவர் "தன்வந்திரி" வந்து மருந்து கொடுத்தார். நாரதர், ருக்மணி எல்லோரும் மனம் கலங்கி நின்றார்கள்! சிறிது நேரத்தின் பின்பும், பரந்தாமன் தலைவலியால் துடிதுடித்தார். வந்தவர்கள் எல்லோரும் கலங்கி நின்றனர். "கிருஷ்ணா! தன்வந்திரிக்கே உன் தலைவலிக்கு மருந்து தெரியவில்லை. நீர் படும் வெதனையை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க மடியவில்லை. இதற்கான மருந்தை நீரே கூறும், எங்கிருந்தாலும் போய் கொண்டுவருகிறோம்" என்று கேட்டார் நாரதர்.

"இதற்கு மருந்து என் பக்தர்களிடம்தான் இருக்கிறது. கேட்டால் அவர்கள் தருவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன்" என்றார் கிருஷ்ணர். "இதென்ன கிருஷ்ணா! நாம் எல்லோருமே உமது பக்தர்கள்தானே, யாரிடம் இருக்கிறது என்று சொன்னால், உடனே தரக்காத்திருக்கிறோம்" என்று நாரதர் உற்சாகமாகப் பதிலளித்தார்.

"அப்படியா நாரதா! எனது பக்தரின் பாத தூசியை எனது சிரசில் தடவினால் இந்த தலைவலி நீங்கிவிடும். உங்களில் யார் தரப்போகிறீர்கள்?" என்று கேட்டார் கிருஷ்ணர். இதைக்கேட்டு, எல்லோரும் திடுக்கிட்டனர்! பரமபக்தரான நாரதரையே எல்லோரும் பார்த்தார்கள்.

நாரதர் வெகுண்டார். "எல்லோரும் என்னை ஏன் பார்க்கிறீர்கள், நான் பரந்தாமனின் பக்தன்தான், ஆனாலும் எனது பாத தூசியை பகவான் தலையில் போட்டு.., பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை. அப்படிச் செய்தால் கொடிய நரகம்தான் எனக்குக் கிடைக்கும். ஏன் பரந்தாமனின் பத்தினி அதைச் செய்யலாமே.. என்றார்.

"நான் அந்தப் பாவத்தை ஒருபோதும் செய்யமாட்டேன்" என்றாள் ருக்மிணி. "பிரபு! வேறு மருந்தைச் சொல்லுங்களேன்" என்றார் நாரதர். "நாரதா! பிருந்தாவனம் சென்று கோபிகளைக் கேட்டுப்பாரும், யாராவது தரக்கூடும்" என்றார் கிருஷ்ணர்.

நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று, செய்தியை கோபிகளுக்குச் சொன்னார். சில கோபிகள் மயங்கி வீழ்ந்தனர். "அட பாவிகளா! இங்கு இருக்கும் வரை அவருக்கு எந்த வருத்தமும் வந்ததில்லையே. துவாரகையில் அவரைச் சரியாகக் கவனிக்க வில்லையா? என்று கேட்டு நாரதரைப் புடைந்து எடுத்தனர். "தங்கள் பாத தூசியை அவரின் தலையில் போட்டு, கொடிய நரகத்திற்குப் போக அங்கு யாரும் விரும்பவில்லை. ஆகவேதான் இங்கு வந்தேன்" என்று பயத்துடன் கூறினார் நாரதர்.

"எங்களில் உண்மையான பக்தை யார் என்று பார்க்க இப்பொழுது நேரமில்லை. எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கூறியவாறு ஒருத்தி துணியை விரிக்க.., மற்றைய கோபியர் அதில் தங்கள் கால் தூசியைச் சேர்த்தனர். அதை ஒரு பொட்டலமாக முடிந்து கொடுத்து, "கதைத்து நேரத்தைப் போக்காமல், உடனடியாகச் சென்று அவரின் தலைவலியைக் குணப்படுத்துங்கள்" என்று நாரதரை அனுப்பி வைத்தார்கள் கோபிகள்.

"எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கோபிகள் சொன்னது நாரதரின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. பயனை எண்ணாது, பகவானை எண்ணுவதே தூய பக்தி என்பதை புரிய வைக்க பகவான் நடத்திய நாடகம் என உணர்ந்தார் நாரதர்!.

கிருஷ்ணரிடம் சென்று அந்த முடிச்சிலிருந்த கோபியரின் பாத தூசியை தனது தலையிலே போட்டுக்கொண்ட நாரதர், தங்களுக்கு எக்கேடு வந்தாலும் பரவாயில்லை, பரந்தாமனுக்கு எக்கேடும் வரக்கூடாது என்று எண்ணும் கோபியரின் பக்தியே மேன்மையானது என்றார்.


Sunday 26 June 2011

ஸ்ரீ தக்ஷிணாமூர்தி அஷ்டகம்..


விஸ்வம் தர்பண த்ருஷ்யமான நகரீ துல்யம் நிஜாந்தர்கதம்
பஷ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயாக:
ய:ஸாக்ஷாத்குருதே ப்ரபோதசமையே ஸ்வாத்மான மேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் பிராங் நிர்விகல்பம் புன:
மாயா கல்பித தேஷகாலகலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம்
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ யஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

யஸ்யைவ ஸ்புரணம் சதாத்மக மசத் கல்பார்தகம் பாஸதே
சாக்ஷாத் தத்வமசீதி வேதவசஸா யோ போத யாத்யாஸ்ரிதான்
ய: சாக்ஷாத் கரணாத் பவேன்ன புனராவ்ருத்திர் பவாம்போனிதௌ
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹா தீப பிரபா பாஸ்வரம்
ஞானம் யஸ்யது சக்ஷுராதி கரண த்வாரா பஹி:ஸ்பந்ததே
ஜானா மீதி தமேவ பாந்தம் அனுபாத் ஏதத்சமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

தேஹம் பிராணமபீந்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச சூன்யம் விது:
ஸ்த்ரீபாலாந்த ஜடோபமா ஸ்த்வஹமிதி ப்ராந்தா ப்ருசம் வாதின:
மாயாசக்தி விலாச கல்பித மஹா வ்யாமோஹ சம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

ராஹு கிரஸ்த திவாகரேந்து சதுசோ மாயா சமாச் சாதநாத்
சன்மாத்ர: கரணோப சம்ஹரணதோ யோ பூத் ஸுஷுப்த: புமான்
ப்ராகச்வாப் சமிதி பிரபோத ஸமயே ய: ப்ரத்யபிக்ஞாயதே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பால்யாதிஷ்வபி ஜாக்ரதா திஷிததா சர்வாஸ்வ வச்தாத்வபி
வ்யாவ்ருத்தா ஸ்வனுவர்த்தமானமஹ மித்யந்த ஸ்புரந்தம் சதா
ஸ்வாத்மானம் பிரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

விஸ்வம் பஸ்யதி கார்ய காரண தயா ஸ்வஸ்வாமி சம்பந்தத:
சிஷ்யாசார்யதயா ததைவ பித்ருபுத்ரா த்யாத்மனா பேதத:
ஸ்வப்னே ஜாக்ரதிவா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமித:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

பூரம்பாம்ஸ்ய நாளோ நிலோம்பர மஹர் நாதோ ஹிமாம்சு புமான்
இத்யாபாதி சராச்சராத்மகமிதம் யச்யைவ மூர்த்யஷ்டகம்
நான்யத்கிஞ்சன வித்யதே விபுசதாம் யஸ்மாத் பரச்மாத்விபோ:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

சர்வாத்மத்வமிதி ஸ்புடீக்ருதமிதம் யஸ்மாதமுஷ்மின் ஸ்தவே
தேனாஸ்ய ஸ்ரவணாத் ததர்த்த மனநாத்யானாச்ச சங்கீர்த்தநாத்
சர்வாத்மத்வமஹா விபூதி ஸஹிதம் ச்யாதீஸ்வரத்வம் ஸ்வத:
சித்தயே தத்புனரஷ்டதா பரிணதம் சைஸ்வர்ய மவ்யாஹதம்.

இதி ஸ்ரீ தக்ஷிணாமூர்தி அஷ்டகம் சம்பூர்ணம்.


Saturday 25 June 2011

சகாதேவனின் சாஸ்திரமும், அமாவாசை முன்னுக்கு வந்த விதமும்..

பாண்டவர் வனவாசம் முடித்து வந்ததும், அவர்களுக்குரிய நாடுதரலாம் என்று கூறியிருந்தான் துரியோதனன். நாடு தருவதாகச் சொன்ன துரியோதனன், அவர்கள் திரும்பி வந்தபின் ஒரு ஊரையேனும் கொடுக்க மறுத்தான்! துரியோதனனாதியோர் அதர்ம வழியில் நடப்பதை எல்லோரும் கண்டித்தனர், ஆனாலும் பலன் அளிக்கவில்லை.

கிருஷ்ணரும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றார். அதர்ம துரியோதனன் போரையே விரும்பினான்! இறுதியில் கிருஷ்ணர் ஆயுதம் ஏந்தாத தேர் சாரதியாக பாண்டவர் பக்கமும், அவரது படையை துரியோதனனும் எடுத்துக் கொண்டான். அதர்ம வழியில் செல்பவர்கள் அழிய வேண்டுமே! ஆகவே போர் முடிவாயிற்று.

பஞ்சபாண்டவர்களில் கடைசித்தம்பியான சகாதேவன் சாஸ்திரக் கலையை கரைத்துக் குடித்தவன். ஆகவே, துரியோதனன் இவனிடம் வந்து, போரை எப்பொழுது ஆரம்பித்தால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று கேட்டான். தர்மவழியில் நடக்கும் பஞ்சபாண்டவர்களுள் ஒருவனான இவன் "வருகிற அமாவாசையில் துவங்கினால் உனக்கே வெற்றி" என்ற உண்மையைக் கூறினான்! சகாதேவன் துரியோதனனுக்கு நாள் குறித்துக் கொடுத்த விஷயம் கிருஷ்ணருக்கும் எட்டியது.

நாளை அமாவாசை.. ஆகவே, போர் ஆரம்பிப்பதற்கு எல்லா ஆயத்தங்களையும் செய்து கொண்டிருந்தான் துரியோதனன். நாளை அமாவாசை என்று இருந்தபொழுது, அமாவாசைக்குரிய சடங்குகளை இன்றே நடத்துங்கள் என்று பாண்டவர்களுக்குக் கட்டளையிட்டார் கிருஷ்ணர். நாளைதானே அமாவாசை என்று அவர்கள் அசட்டையாக இருந்தார்கள். கிருஷ்ணர் எல்லோரையும் வரவழைத்து, அமாவாசைக்குரிய சடங்கை அவரே ஆரம்பித்து வைத்தார்.

அமாவாசைக்குரிய சடங்குகள் மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்தது! சூரியனும், சந்திரனும் மிக கிட்டவே நின்றிருந்த சமயம் அது. "இவர்கள் நாளை செய்ய வேண்டிய சடங்கை இன்றே செய்கிறார்களே...நாம் போய் நாளைதான் அமாவாசை என்பதை விளக்கிக் கூறுவோம்" என்று தீர்மானித்த சூரியரும் சந்திரரும், இறங்கி சடங்கு நடக்கும் இடத்திற்கு வந்தார்கள். "நாளை தானே அமாவாசை, இச்சடங்கை நாளை செய்யுங்கள்" என்று கூறியவாறு, அதை நிறுத்த முயன்றனர்.

அப்பொழுதுதான், மோகனப் புன்முறுவலுடன் நின்ற கிருஷ்ணரை சூரியனும், சந்திரனும் கண்டனர். "சூரிய சந்திரர்களே! கொஞ்சம் பொறுங்கள். சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும் நாளன்றோ அமாவாசை! இப்பொழுது இருவரும் சேர்ந்துதானே இங்கே நிற்கிறீர்கள். ஆகவே, இன்று தானே அமாவாசை" என்றார் கிருஷ்ணர்! விஞ்ஞான ரீதியிலும், சூரியனும் சந்திரனும் ஒன்றாக நிற்கும் பொழுதே, பூமிவாசிகளுக்கு அமாவாசை.

ஆகவே சூரியர் சந்திரருக்கு அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று! அதைத் தொடர்ந்து, அமாவாசை சடங்கு தடல்புடலாக நடந்து முடிந்தது. துரியோதனன் மறுநாளே போரை ஆரம்பித்தான், ஆகையினால் அவனால் வெற்றிபெற முடியவில்லை.


Friday 24 June 2011

ஸ்ரீ ஆதி சங்கர் அருளிய குரு அஷ்டகம்


சரீரம் ஸுருபம் ததாவா களத்ரம்
யசஸ்சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்
மனஸ்சேந்ந லக்னம குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்

கலத்ரம் தனம் புத்ர பெளத்ராதி ஸர்வம்
க்ருஹம் பாந்தவா: ஸர்வம் ஏதத்தி ஜாதம்
மனஸ் சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

ஷடங்காதி வேதோமுகே சாஸ்த்ர வித்யா
கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதி
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

விதேசேஷு மான்ய: ஸதேசேஷு தன்ய:
ஸதாசாரவ்ருத்தேஷு மத்தோ ந சான்ய:
மனஸ்சேந்த லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

க்ஷமாமண்டலே பூபபூபால வ்ருந்தை:
ஸதாஸேவிதம் யஸ்ய பாதார விந்தம்
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

யஸோதேக தம் திக்ஷு தானப்ரதாபாத்
ஜகத்வஸ்து ஸர்வம் கரே யத் ப்ரஸாதாத்
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

ந போகே ந யோகே ந வா வாஜிராஜம்
ந காந்தாமுகேநைவ வித்தே ஷுசித்தம்
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே
ந தேஹே மனோ வர்த்ததே மே த்வனர்க்யே
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்.

குரோ ரஷ்டகம் ய:படேத் புண்யதேஹீ
யதிர் பூபதில் ப்ரஹ்மசாரீ ச கேஹீ
லபேத் வாஞ்சி தார்த்தம் பதம் ப்ரஹ்மஸம்ஜ்ஞம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம்
குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம்.

இதி குரு அஷ்டகம் சம்பூர்ணம்.


Thursday 23 June 2011

ஸ்ரீ கணாஷ்டகம்


ஏகதந்தம் மஹாகாயம்
தப்ரத காஞ்சன சந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

மௌஞ்ஜிக்ருஷ்ணா ஜீனகரம்
நாகயக்ஞோப வீதினம்
பாலேந்து சகலம் மௌலௌ
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

சித்ரரத்ன விசித்ராங்கம்
சித்ரமாலா விபூஷிதம்
காமரருபதரம் தேவம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

கஜவக்ரம் சுரஸ்ரேஷ்டம்
கர்ண சாமரபூஷிதம்
பாசாங்குசதரம் தேவம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

மூஷகோத்தம மாருஹ்ய
தேவாசுர மஹா ஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

யக்ஷகின்னர கந்தர்வ
சித்தவித்தியா தரைத்ததா
ஸ்தூயமானாம் மஹாபாஹும்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

அம்பிகாஹ்ருத யானந்தம்
மாத்ருபிர் பரிவேஷ்டிதம்
பக்தப்ரியம் மதோன்மத்தம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

சர்வ விக்னஹரம் தேவம்
சர்வ விக்னவிவர்ஜிதம்
சர்வ சித்தி ப்ரதாதாரம்
வந்தேஹம் கணநாயகம்
வந்தேஹம் கணநாயகம்.

கணாஷ்டகமிதம் புண்யம் யாபடேத் சததம் நர:
சித்தயந்திசர்வகார்யாணி வித்யாவான்தனவான் பவதி.

இதி ஸ்ரீ கணாஷ்டகம் சம்பூர்ணம்.


Wednesday 22 June 2011

ஸ்ரீ சுப்ரமண்யாஷ்டகம்.


ஹே சுவாமிநாத கருணாகர தீன பந்தோ
ஸ்ரீ பார்வதீஷ முக பங்கஜ பத்ம பந்தோ
ஸ்ரீ ஷாதி தேவகண பூஜித பாதபத்ம
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

தேவாதி தேவசுத தேவகணாதி நாத
தேவேந்திர வந்தய ம்ருதுபங்கஜ மஞ்சுபாத
தேவர்ஷி நாரத முனீந்த்ர சுகீத கீர்த்தே
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

நிதயான்னதான நிரதாகில ரோகஹாரின்
பாஹிய பிரதான பரிபூரித பக்தகாம
ஸ்ருத்யாகம ப்ரணவ வாச்ய நிஜஸ்வரூப
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

க்ரௌஞ்சா சுரேந்த்ர பரிகண்டன ஷக்தி சூல
சாபாதி சஸ்திர பரிமண்டித திவ்யபாணே
ஸ்ரீ குண்டளீஷ தர துண்ட ஷிகீந்திர வாக
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

தேவாதி தேவ ரதமண்டல மத்யமேத்ய
தேவேந்திர பீடநகரம் திருட சாபஹஸ்த
சூரம் நிஹத்யா சுர கோடிப்ரீத்தியமான
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

ஹாராதி ரத்ன மணி யுக்த க்ரீட ஹார
கேயூர குண்டல லசத் கவசாபிராம
ஹே வீர தாரக ஜயாமர பிருந்த வந்த்ய
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

பஞ்சாக்ஷராதி மனு மந்திரிதகாங்க தோயை:
பஞ்சாம்ரிதை: பிரமுதிதேன்ற முகை: முனீந்றை:
பட்டாபிசிக்த ஹரியுக்த வராசநாத
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

ஸ்ரீ கார்த்திகேய கருனாம்ருத பூர்ண த்ருஷ்ட்யா
காமாதிரோக கலுஷீக்ருத துஷ்ட சித்தம்
ஷிக்த்வா து மாமவ கல்லாதார காந்தி காந்த்யா
வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம்.

சுப்ரமண்யாஷ்டகம் புண்யம் யேபடந்தி த்விஜோத்தமா:
தே சர்வே முக்திமாயாந்தி சுப்பிரமணிய பிரசாதத:
சுப்பிரமணியஷ்டகம் இதம் ப்ராதர் உத்தாய ய: படேத்
கோடி ஜன்ம க்ருதம் பாபம் தத் க்ஷணநாதேவ நஷ்யதி.

இதி சுப்ரமண்யாஷ்டகம் ஸம்பூர்ணம்.



Tuesday 21 June 2011

பிரார்த்தனையும்! அருளும்!

குருவாயூரில் இரண்டு கிருஷ்ண பக்தர்கள் இருந்தார்கள். ஒருவர் "குரூரம்மை" என்ற பெண்மணி, மற்றவர் "பில்வமங்கள்". இவ்விருவருக்கும் கண்ணன் குழந்தை கண்ணனாகவே பேசி, விளையாடி மகிழ்விப்பான்.

கண்ணனைக் காணாமல் குரூரம்மை சாப்பிடாமலே இருப்பாள். பில்வமங்களோ தன்னிடம் இருக்கும் துளசி தீர்த்தத்தையே கண்ணனைச் சாப்பிடச் சொல்வான். இருந்தாலும் இருவருமே பக்தர்கள்தான்.

ஒருநாள் இவ்விருவருக்கும் தெரிந்த ஒருவர் வயிற்றுவலியால் தவித்தார். அவர் பில்வமங்களிடம் சென்று "எனது வயிற்று வலிபற்றி உன் கிருஷ்ணரிடம் கொஞ்சம் சொல்லக்கூடாதா?" என்று கேட்டான். பில்வமங்கள் கிருஷ்ணரைக் கண்டபொழுது "எனது நண்பன் ஒருவன் வயிற்றுவலியால் ரொம்பவும் கஷ்டப்படுகிறான். இதற்கு ஏதும் செய்ய முடியதா? " என்று கேட்டார். "அதற்கு என்ன செய்வது. அது அவனது பூர்வ ஜென்ம வினை. இப்பொழுது அனுபவிக்கிறான்" என்றார்.

வயிற்றுவலி குணமடையாத காரணத்தால், அவன் குரூரம்மையிடம் போனான். "அம்மா! என்னால் இந்த வயிற்றுவலியைத் தாங்க முடியவில்லை. உன் கிருஷ்ணரிடம் கொஞ்சம் சொல்லக்கூடாதா?" என்று கேட்டான். கண்ணன் குரூரம்மையிடம் வந்த பொழுது "எனக்குத் தெரிந்த ஒருவன் வயிற்றுவலியால் மிகவும் கஷ்டப்படுகிறான். அவன் வலியை நீ போக்கக்கூடாதா" என்று வேண்டுகோள் விடுத்தாள். "ஆகட்டும். அவன் வலியை போக்குகிறேன்" என்றான் கண்ணன். அவனின் வயிற்றுவலியும் நீங்கியது.

ஓர் நாள் பில்வமங்கள் வயிற்றுவலி நண்பனைச் சந்தித்தபொழுது, அதுபற்றி விசாரித்தார். "அதுவா, குரூரம்மை எனக்காக கண்ணனிடம் சொன்னாள். அது இருந்த இடம் தெரியாமல் பறந்துவிட்டது" என்றான். பில்வமங்கள் கோபத்துடன் கண்ணனுக்காக காத்திருந்தார். "அந்த வயிற்றுவலிக்காரனைப் பற்றி நான் சொன்னபொழுது, "அது அவன் பூர்வ ஜென்ம வினை என்றாய், குரூரம்மை சொன்னவுடனேயே வயிற்றுவலியைப் போக்கிவிட்டாயே" என்று கோபத்துடன் கூறினான்.

"ஆமாம்.., குரூரம்மை வயிற்றுவலியைப் போக்கு" என்று தாயுள்ளத்துடன் கேட்டாள். ஆனால் நீயோ, "வயிற்று வலிக்கு எதுவும் செய்யமுடியாதா?" என்றுதானே கேட்டாய்! என்னுடைய அருளும் அனுக்கிரகமும் எப்படிப் பிரார்த்தனை செய்கிறார்களோ, அதைப் பொறுத்தே அமைகிறது. இதில் வேண்டியவன், வேண்டாதவன் என்று ஒன்றும் இல்லை என்றார் கண்ணன்.

"பிரபோ! வயிற்றுவலியைப் போக்கும்படி கேட்காதது என் தவறுதான். பிரார்த்திப்பதில்கூட சூட்சுமம் இருப்பதை இப்போது அறிந்து கொண்டேன். என் மனம் தெளிந்தது. என்னை மன்னிப்பாயாக" என்று கைகூப்பி வணங்கி நின்றான் பில்வமங்கள்.



Monday 20 June 2011

மஹாவிஷ்ணு சுலோகங்கள்..


சாந்தாகாரம் புஜக சயனம்
பத்மநாபம் ஸுரேஸம்
விஸ்வாதாரம் ககன ஸத்ருஸம்
மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மி காந்தம் கமல நயனம்
யோகிஹ்ருத் த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம்
சர்வ லோகைகநாதம்.


காயேந வாசா மநஸேந்த்ரியைர்வா
புத்யாத்மநா வா ப்ரக்ருதே:
ஸ்வபாவா கரோமி யத்யத்
ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்பயாமி.


Sunday 19 June 2011

பகவானைச் சரணடைந்த தவளைக் குஞ்சு...

வனவாசம் நடத்திவந்த பாண்டவர்களைப் பார்த்துவர, ஒருநாள் கிருஷ்ணர் அங்கு சென்றார்.

கிருஷ்ணரைக் கண்ட குந்திதேவி "காட்டிலே எத்தனை நாள்தான் அவதிப்பட முடியும்" என்று சலிப்புடன் கேட்டாள். "அத்தை, எல்லாவற்றிற்கும் ஒருமுடிவு காலம் உண்டு. விரைவில் நல்ல காலம் வரும். கவலைப்படாதே" என்று ஆறுதல் கூறினார் கிருஷ்ணர்.

கிருஷ்ணரைக் கண்ட பாஞ்சாலி ஓடிவந்து "அண்ணா! நல்ல காலம் வருகிறபோது வரட்டும், முதலில் வந்த களைப்புத் தீர நீராடுங்கள். சட்டென வெந்நீர் சுடவைக்கிறேன்" என்று கூறியவாறு அடுப்பங்கரைக்குப் போக, வீமன் காய்ந்த சுள்ளிகளைக் கொடுத்து, அண்டாவிலும் நீர் கொண்டுவந்து கொடுத்தான். அடுப்பு நன்றாக எரிந்து கொண்டு இருந்தது. நீர் கொதிக்கும்வரை, எல்லோரும் உரையாடிக் கொண்டு இருந்தனர்!

"அருச்சுனா! வனவாசம் எப்படி இருக்கு" என்று கேட்டார் கிருஷ்ணர். "நீங்கள் எங்கள் இதயத்தில் இருக்கும் வரை, எங்களுக்கு ஏது கவலை. நகரத்தில் இருந்ததைவிட, மகிழ்ச்சியாகவே பொழுது போகிறது" என்றான். கிருஷ்ணர் தருமரைப் பார்த்து "தர்மா! தம்பி சொல்வதைக் கேட்டாயா, நாட்டைவிட காடே சுகம் என்கிறானே!" "அதில் என்ன தப்பு, இயற்கை அழகிற்கு ஈடு இணை ஏது" என்றார் தருமர். பிறகு "பாஞ்சாலி! நீ என்ன நினைக்கிறாய்" என்று கேட்க, "காடோ நாடோ, எனக்கு இவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம்" என்றாள். "அப்படியானால் நல்லது.., நீர் சுட்டுவிட்டதா பார்" என்றார் கிருஷ்ணர்.

இப்பொழுது நன்கு சுட்டிருக்கும் என்று கூறியபடி, பார்க்கச் சென்றாள். "அடுப்பு இவ்வளவு நன்றாக எரிகிறதே, இன்னும் நீர் குளிராகவே இருக்கிறது" என்று குரல் கொடுத்தாள். பீமனும் அங்கு சென்று பார்த்துவிட்டு "இது என்ன அதிசயம்! இவ்வளவு நேரமாகியும், நீர் குளிராகவே இருக்கிறதே" என்று கூறியவாறு அவர்கள் பேசிக் கொண்டு இருந்த இடத்திற்கு வந்தான்.

"அப்படியா! வாருங்கள் பார்க்கலாம்" என்றவாறு எல்லோரையும் அழைத்து வந்தார் கிருஷ்ணர். அண்டாவில் கையை விட்டுப் பார்த்துவிட்டு "ஆமாம்! தண்ணீர் சில்லென்று குளிர்கிறதே, இதை ஊற்றிவிட்டு வேறு நீர் வையுங்கள்" என்றார் கிருஷ்ணர்.

பீமன் அண்டாவைச் சரிக்க, அதிலிருந்து தவளைக் குஞ்சு தத்திக் கொண்டு வெளியேறியது! அங்கு நின்ற குந்திதேவி "இதென்ன ஆச்சரியமாய் இருக்கிறதே" என்றாள். அருகில் நின்ற தருமர் "இதில் என்ன ஆச்சரியப்படுவதற்கு இருக்கிறது! தவளை அண்டாவினுள் இருந்தபடியே பகவானைத் தஞ்சம் அடைந்திருக்கும், தஞ்சம் புகுந்தவரைக் காப்பது பகவானின் கடமையாச்சே" என்றார். "ஆமாம் தர்மா, அது அற்ப ஜீவனாக இருந்தாலும், சரணடைபவர்களை காப்பாற்றுவது கடமையாச்சே" என்றார் கிருஷ்ணர்.

ஒரே குரலில் எல்லோரும் "கண்ணா மணிவண்ணா, நாங்களும் சரணடைகிறோம" என்றார்கள். பலபேர் அழிந்த பாரதப்போரில், இவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்!

இருந்த இடத்தில் இருந்தவாறே முழு மனதுடன் பகவானை வேண்டிக்கொண்ட தவளைக்குஞ்சு, வியக்கத்தக்க விதத்தில் உயிர் தப்பியது! பக்தி உண்மையானால் பலன் கிடைக்கும்.



Saturday 18 June 2011

ஸ்ரீ சூர்யாஷ்டகம்.


ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர.
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே.

ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கஸ்யபாத்மஜம்.
ஸ்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்.
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்வரம்.
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச.
ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்
ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.

இதி ஸ்ரீ ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்



Thursday 16 June 2011

ஸ்ரீ புவனேஸ்வரி அஷ்டகம்.


அஞ்ஜன ரஞ்சித கஞ்ஜன மஞ்ஜூள லோசன லோகன பூர்ணதயே
குஞ்ஜர சர்ம குடும்பினி காஞ்சன நூபுர சோபித பாதயுகே
ஸஞ்சித பாப வினோசனி குஞ்சர வக்தர ஸூதேம்புஜ துல்யபதே
பாலய மாம் புவனேச்வரி பாலக மானத மாத்ருத பக்தஜனே.

மத்த மஹாஸூர பந்தன தாஹக ந்ருத்த பதிப்ரிய
ரூபயுதேஸத்தவ மானவ மானஸ சிந்திதஸூந்தர பாதயுகேஸூபகே
த்வஸ்த கலாஸூர ஹஸ்த கதாங்குச சோபினி மத்த மராள கதே
சங்கரி மே புவனேச்வரி ஸம்குரு ஸங்கத மானகளே விமலே.

அம்புருஹாஸன ஸன்னுத வைபவ சாலினி சூலினி சைலஸூதே
தும்புரு நாரத கீதகுணே மணி மண்டித மண்டப மத்யகதே
அம்ப கதம்ப வனாவஸதேம்புஜ ஷோபி ரமா வினுதே வினதே
சாம்பவி மாம்புவனேஸ்வரி பாலய காலபயாத் தயயா ஸஹிதே.

ஆஸூரசக்தி ஹரே மித பாஸூர பூஷண பாஸ்வர காயதரே
பூஸூர வைதிக மந்த்ர நுதே கரு தூப ஸூகந்தித சாரு கசே
தாருண ஸம்ஸ்ருத்தி மோஹ விதாரணி வீருஜனாபயதே வரதே
மாதருமே புவனேஸ்வரி தூரய துஷ்க்ருத மாசுமஹேஸ்வரி மே.

ஸோம தரே கமனீய முகே நமனீய பதே ஸமநீதி தரே
ஸாமநுதே வர நாம யுதேமித பாமஹிதே ரிபு பீம குணே
தாமரஸோபம பாணி த்ருதோத்தம சாமர வீஜன லோல ஸூரே
மாமவ ஹே புவனேஸ்வரி காம வசங்கத மானஸ மங்க்ரிநதம்.

காளி கபாலினி சூலினி சூலி மனோஹர காமினி சைலஸூதே
பாலித பக்த ஜனேளி விமோஹக தூளி தராம்புஜ சோபி பதே
ஹ்ரீலித மன்மத ஸூந்தரி சாலித சாமர சோபித பார்ஸ்வயுகே
தூளித வைரி பலே பரிபாலய மாம் புவனேஸ்வரி லோல மதிம்.

பஸ்மித மன்மத ஸங்கர விஸ்மய காரக ஸூஸ்மித சோபிமுகே
பல்லவ கோமளபங்கஜ தல்லஜ பாணித லேகல பாஷிணி மாம்
உத்தர ஸத்வர மத்வர தோஷிணி வாக்வர தேவகுரு ப்ரணதே
நூதன ஸாலபுரீ நிலயே புவனேஸ்வரீ பாலய தாஸ மிமம்.

பக்தி யுதோத்தம புக்தி விதாயினி சக்தி தராத்மஜ சக்தியுதே
சுத்தியுதானக புத்தி விவர்த்தினி தேவ துனீதர பார்ஸ்வ கதே
சக்ர சமர்ச்சக சக்ர முகாமரவக்ர விரோதி வினாஷினி தே
நாத மயாக்ருதி சோபித மே புவனேஸ்வரி பாது பதாப்ஜயுகம்.

சிஷ்ட நதாகில விஷ்டபமாத்ரு வராஷ்டககிருஷ்ட மதிம் மதிமான்
புஷ்ட தனோதிகஹ்ருஷ்ட மனாபகுதுஷ்டஜனேஷ்ட கரோ விலஸேத்
த்ருஷ்டதராந்தக கஷ்டதபாதவிஸ்ருஷ்டபயஸ் ஸூசிதோ மனுஜோ
திஷ்டவிதிஷ்டஸூகோஷ்ட திசாஸூ பவேத்ப்ரதிதோ ஹிதஸ்ஸகலை:

இதி ஸ்ரீ புவனேஸ்வரி அஷ்டகம் சம்பூர்ணம்.


ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்.


அம்பா சாம்பவி சந்த்ரமௌலி அபலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹைமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ
ஸாவித்ரீ நவயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனீ ஆனந்த ஸந்தாயினீ
வாணீ பல்லவ பாணி வேணு முரளீ கானப்ரியா லோலினீ
கல்யாணீ உடுராஜபிம்ப வதனா தூம்ராக்ஷ ஸம்ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா நூபுர ரத்ன கங்கண தரீ கேயூர ஹாராவலீ
ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயகை ராஜிதா
வீணா வேணு விநோத மண்டித கரா வீராஸனே ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா ரௌத்ரிணி பத்ரகாளி பகலா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மானோஜ்ஜ்வலா
சாமுண்டாச்ரித ரக்ஷ போஷ ஜநநீ தாக்ஷாயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா சூல தனு குசாங்கு தரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப ப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா
மல்லாத்யாஸுர மூகதைத்ய மதனீமாஹேச்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரீ ஆர்யா விஸம்சோபிதா
காய்த்ரீ ப்ரணவாக்ஷர அம்ருதரஸ: பூர்ணானுஸந்தீ க்ருதா
ஓங்காரீ விநதாஸுதார்ச்சித பதா உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா சாச்வத ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி பிபீலிகாந்த ஜநநீ யா வை ஜகன்மோஹினீ
யா பஞ்சப்ரணவாதி ரேபஜனனீயா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய:படேத்
அம்பா லோக கடாக்ஷ வீக்ஷ லலிதஞ்ச ஐச்வர்யமவ்யாஹதம்
அம்பா பாவன மந்த்ர ராஜபடனா தந்தே ச மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ.

இதி ஸ்ரீ ராஜராஜேச்வர்யஷ்டகம் சம்பூர்ணம்.


Wednesday 15 June 2011

ஸ்ரீ மூகாம்பிகா அஷ்டகம்.


நமஸ்தே ஜகத்தாத்ரி ஸத் ப்ரஹ்மரூபே
நமஸ்தே ஹரோபேந்த்ர தாத்ராதி வந்த்யே
நமஸ்தே ப்ரபந்நேஷ்ட தானைகதக்ஷே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

விதி க்ருத்தி வாஸா ஹரிர் விஸ்வமேதத்
ஸ்ருஜத் யத்தி பாதீதி யத்தத் ப்ரஸித்தம்
க்ருபாலோகநாதே வதே சக்திரூபே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

த்வயா மாயயா வ்யாப்த மேதத் ஸமஸ்தம்
த்ருதம் லீலயா தேவி குக்ஷௌஹி விச்வம்
ஸ்த்திதம் புத்தி ரூபேண ஸர்வத்ரஜந்தௌ
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

யயாபக்தவர்கா ஹி லக்ஷ்யந்த ஏதே
த்வயா த்ரப்ரகாமம் க்ருபாபூர்ண த்ருஷ்ட்யா
அதோகீயஸே தேவி லஷ்மீரிதித்வம்
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

புனர்வாக் படுத்வாதிஹீனாஹிமூகா
நரைஸ்தைர்நிகாமம் கலுப்ரார்த்யஸே யத்
நிஜஸ்யாப்த யேதச் ச மூகாம்பிகாத்வம்
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

யதத்வைத ரூபாத் பரப்ரஹ்மணஸ்த்வம்
ஸமுத்தாபுனைர் விச்வலீலோத்யமஸ்தா
ததாஹூர் ஜனாஸ்த்வாம் ச கௌரீ குமாரீ
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

ஹரீசாதிதேஹோத்ததேஜோ மயப்ர
ஸ்புரச் சக்ர ராஜாக்ய லிங்கஸ்வரூபே
மஹாயோகி கோலாக்ஷிஹ்ருத் பத்மகேஹே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

நம சங்க சக்ராபயா பீஷ்ட ஹஸ்தே
நமஸ்தே ம்பிகே கௌரி பத்மாஸனஸ்த்தே
நம ஸ்வர்ண வர்ணே ப்ரஸன்னே சரண்யே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேசி.

இதம் ஸ்தோத்ரரத்னம்க்ருதம் ஸர்வதேவைர்
ஹ்ருதித்வாம் ஸமாதாய லக்ஷ்ம்யாஷ்டகம்
ய: படேந்நித்யமேவ வ்ரஜ யாகலக்ஷ்மீம்
ஸ வித்யாம் ச ஸத்யம் பவத்யா ப்ரஸாதாத்.
ஸ வித்யாம் ச ஸத்யம் பவத்யா ப்ரஸாதாத்.

இதி ஸ்ரீ மூகாம்பிகா அஷ்டகம் சம்பூர்ணம்.


காலபைரவ அஷ்டகம்.


தேவ ராஜ சேவ்ய மான பாவனாக்ரி பங்கஜம்
வ்யால யஞ்க சூத்ர மிந்து சேகரம் கிருபாகரம்
நாரதாதி யோகி விருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

பானு கோட்டி பாஸ்வரம் பவாப்தி தாரகம் பரம்
நீலகண்ட மீப்சிதார்த்த தாயக்கம் திரிலோஷனம்
கால கால மம்புஜாக்ஷ மக்ஷ சூல மக்ஷரம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

சூல தண்ட பாச தண்ட பாணி மாதி காரணம்
ஷ்யாம காய மாதி தேவமக்ஷரம் நிராமயம்
பீம விக்ரமம் பிரபும் விசித்ர தாண்டவ ப்ரியம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

புக்தி முக்தி தாயக்கம் பிரசஷ்த சாரு விக்ரகம்
பக்த வத்சலம் சிவம் சமஸ்த லோக விக்ரகம்
விநிக்வணன் மனோக்ன ஹேம கிண்கிணி லசத் கடீம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே

தர்ம சேது பாலகம் த்வ தர்ம மார்க்க நாசகம்
கர்ம பாச மோச்சகம் சுஷர்ம தாயக்கம் விபும்
சுவர்ண வர்ண சேஷ பாச ஷோபிதாங்க மண்டலம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

ரத்ன பாதுக பிரபாபிராம பாதயுக்மகம்
நித்யமத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்சனம்
ம்ருத்யு தர்ப்ப நாசனம் கராலடம்ஷ மோக்ஷனம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

அட்டஹாச பின்ன பத்ம ஜாண்ட கோச சந்ததிம்
திருஷ்டி பாட நஷ்ட பாப ஜால முக்ர சாசனம்
அஷ்டசித்தி தாயகம் கபால மாளிகந்தரம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

பூத சங்க நாயகம் விசால கீர்த்தி தாயகம்
காசி வாச லோக புண்ய பாப ஷோதகம் விபும்
நீதி மார்க்க கோ விதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோகரம்
ஞான முக்தி சாதணம் விசித்ர புண்ய வர்த்தனம்
சோக மோக தைன்ய லோப கோப தாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி சந்நிதிம் த்ருவம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
காலபைரவம் பஜே
காலபைரவம் பஜே.


Tuesday 14 June 2011

ஸ்ரீ ஸுதர்ஷன அஷ்டகம்.



ப்ரதிபட ச்ரேணி பீஷண வரகுணஸ் தோம பூஷண
ஜநிபய ஸ்தான தாரண ஜகத வஸ்தான காரண
நிகில துஷ்கர்ம கர்சன நிகம ஸத்தர்ம தர்சன
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன.

சுபஜகத் ரூப மண்டன ஸுரஜனத் ராஸ கண்டன
சதமகப் ப்ரஹ்ம வந்தித சதபதப் ப்ரஹ்ம நந்தித
ப்ரதித வித்வத்ஸ பக்ஷிதா பஜதஹிர் புத்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன.

நிஜபத ப்ரீத சத்கண நிருபதி ஸ்பீத ஷட்குண
நிகம நிர்வ்யூட வைபவ நிஜபர வ்யூஹ வைபவ
ஹரிஹர த்வேஷ தாரண ஹரபுர ப்ரோஷ காரண
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன.

ஸ்புடதடி ஜ்ஜால பிஞ்சர ப்ருதுதர ஜ்வால பஞ்சர
பரிகதப் ரத்ன விக்ரஹ பரிமித பிரக்ஞ துர்க்ரஹ
ப்ரஹரணக் ராம மண்டித பரிஜந த்ராண பண்டித
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன.

புவன நேத்ர த்ரயீமய ஸவன தேஜஸ் த்ரயீமய
நிரவ திஸ்வாது சிந்மய நிகில சக்தே ஜகந்மய
அமித விச்வ க்ரியாமய சமித விஷ்வக் பயாமய
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன

மஹித ஸம்பத் ஸதக்ஷர விஹித ஸம்பத் ஷடக்ஷர
ஷடலசக்ர ப்ரதிஷ்ட்டித ஸகல தத்வ ப்ரதிஷ்ட்டித
விவித ஸங்கல்ப கல்பக விபுத ஸங்கல்ப கல்பக
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன

ப்ரதி முகாலீட பந்துர ப்ருது மஹாஹேதி தந்துர
விகட மாலா பஹிஷ்க்ருத விவித மாயா பரிஷ்க்ருத
ஸ்திர மஹா யந்த்ர தந்த்ரித த்ருடதயா தந்த்ர யந்த்ரித
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன

தநுஜ விஸ்தார கர்தன தநுஜ வித்யா விகர்தன
ஜனித மிச்ராவி கர்தன பஜத வித்யாநி கர்தனா
அமர த்ருஷ்டஸ் வவிக்கிரமா ஸமர த்ருஷ்ட ப்ரமிக்கிரம
ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன ஜயஜய ஸ்ரீ ஸுதர்ஷன

த்விச துஷ் கமிதம் ப்ரபூத ஸாரம்
படதாம் வேங்கட நாயக ப்ரணீதம்.
விஷமே பி மநோரத: ப்ரதாபன்
ந விஹன்யேத ரதாங்க துர்யகுப்தக:

இதி ஸ்ரீ ஸுதர்ஷனாஷ்டகம் சம்பூர்ணம்.

Monday 13 June 2011

ஸ்ரீ சிவ தாண்டவ ஸ்தோத்திரம்.


ஜடாடவீகலஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்தலே
கலேவலம்ப்ய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்.
டமட்டமட்டமட்டமன்னிநாதவட்டமர்வயம்
சகார சண்டதாண்டவம் தனோது ந: ஸிவ: ஸிவம்.

ஜடாகடாஹஸம்ப்ரமப்ரமன்னிலிம்பனிர்ஜரீ
விலோலவீசிவல்லரீவிராஜமானமூர்தனி.
தகத்தகத்தகஜ்வலல்லலாடபட்டபாவகே
கிஷோரசந்த்ரசேகரே ரதி: ப்ரதிக்ஷணம் மம.

தராதரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர
ஸ்புரத்திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே.
க்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்தராபதி
க்வசித் திகம்பரே மனோ வினோத மேது வஸ்துனி.

ஜடாபுஜங்க பிங்கலஸ்புரத்பணாமணிப்ரபா
கதம்ப குங்கும த்ரவ ப்ரலிப்த திக்வதூமுகே.
மதாந்த ஸிந்துர ஸ்புரத்வகுத்த ரீயமேதுரே
மநோ விநோதமத்புதம் பிபர்து பூதபர்தரி.

ஸஹஸ்ரலோசன ப்ரப்ருத்ய சேஷலேக சேகர
ப்ரஸூன தூலி தோரணி விதூஸராங்ரி க்ரபீடபூ:
புஜங்கராஜ மாலயா நிபத்தஜாட ஜூடக
ஸ்ரீயை சிராய ஜாயதாம் சகோர பந்துசேகர:

லலாட சத்வ ரஜ்வலத் தனஞ்சயஸ் புலிங்கபா
நீபீத பஞ்சஸாயகம் நமன்னிலிம்ப நாயகம்.
ஸுதாமயூக லேகயா விராஜமான சேகரம்
மஹாகபாலி ஸம்பதேசி ரோஜ டாலமஸ்து ந:

கரால பால பட்டிகா தகத் தகத் தகஜ்வலத்
தனஞ்சயாஹுதி க்ருத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே
தராதரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக
ப்ரகல்பனைக சில்பினி த்ரிலோசனே ரதிர்மம.

நவீன மேக மண்டலீ நிருத்த துர்தர ஸ்புரத்
குஹூனி ஷீதினீதம: ப்ரபந்த பத்த கந்தர:
நிலிம்ப நிர்ஜரீ தரஸ் தனோது க்ருத்தி ஸிந்துர:
கலாநிதான பந்துர: ஸ்ரீயம் ஜகத் துரந்தர:

ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்சகாலி மப்ரபா
வலம்பிகண்ட கந்தலீ ருசிப்ரபத்த கந்தரம்
ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம்
கஜச்சிதாந்த கச்சிதம் தமந்தகச் சிதம் பஜே.

அகர்வ ஸர்வ மங்கலா கலா கதம்ப மஞ்சரி
ரஸப்ரவாஹமாதுரீ விஜ்ரும்பணாம தூவ்ரதம்.
ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம்
கஜாந்த காந்த காந்தகம் தமந்தகாந்தகம் பஜே.

ஜயத்வதப்ரவிப்ரமப்ர மத்புஜங்கதுங்க மச்வஸ
த்விநிர்கமத்கம ஸ்புரத்கரால பாலஹவ்யவாட்.
திமித் திமித் திமித்வனன் ம்ருதங்க துங்க மங்கள
த்வனிக்ரம ப்ரவர்தித ப்ரசண்ட தாண்டவ: ஸிவ:

ஸ்ப்ருஷத்வி சித்ரதல்பயோர் புஜங்கமௌக்திகஸ்ரஜோர்
கரிஷ்டரத்னலோஷ்டயோ: ஸுஹ்ருத்விபக்ஷபக்ஷயோ:
த்ருணாரவிந்தசக்ஷுஷோ: ப்ரஜாமஹீமஹேந்த்ரயோ:
ஸமப்ரவ்ருத்திக: கதா ஸதாசிவம் பஜாம்யஹம்.

கதா நி்லிம்ப நிர்ஜரி நிகுஞ்சகோடரே வஸன்
விமுக்ததுர்மதி: ஸதா சிர: ஸ்தமஞ்ஜலிம் வஹன்
விலோல லோல லோசனோ லலாம பால லக்னக:
சிவேதி மந்த்ர முச்சரன் கதாஸுகீ பவாப்யஹம்.

இதம் ஹி நித்யமேவமுக்தமுத்தமோத்தமம் ஸ்தவம்
படன்ஸ்மரம்ப்ருவன்னரோ விஸுத்தி மேதி ஸந்ததம்
ஹரே குரௌ ஸுபக்திமாசு யாதி நான்யதா கதிம்
விமோஹனம் ஹி தேஹினாம் ஸுசங்கரஸ்ய ஸிந்தனம்.


Sunday 12 June 2011

ஸ்ரீ தோடகாஷ்டகம்.

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதரைப் போற்றி ஸ்ரீ தோடகாச்சார்யார் அருளிய தோடகாஷ்டகம் என்றழைக்கப்பட் ஸ்ரீ சங்கர தேசிகாஷ்டகம்.


விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத்கதிதார்தநிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம் பவ
சங்கர தேசிக மே சரணம்.

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர து:க விதூநஹ்ருதம்
ரசயாகில தர்சந்தத்வ விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்.

பவதா ஜநதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரணசாருமதே
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்.

பவ ஏவ பவாநிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்.

ஸுக்ருதேதிக்ருதே பஹுதா
பவதோ பவிதா ஸமதர்சநலாலஸதா
அதிதீநமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்.

ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹாமஹஸச்சலத:
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம்.

குருபுங்கவ புங்கவகேதந நே
ஸமதாமயதாம் நஹி கோபிஸுதீ:
சரணாகதவஸ்தல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்.

விதிதா ந மயா விசதைககலா
ந ச கிஞ்சந காஞ்சநமஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்.


Saturday 11 June 2011

ஸிவ மாநஸ பூஜா ஸ்தோத்ரம்


ரத்னை: கல்பிதம் - ஆஸநம் ஹிமஜலை: ஸ்நாநம் ச திவ்யாம்பரம்
நானாரத்ந: விபூஷிதம் ம்ருகமதாமோதாங்கிதம் சந்தநம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பஸுபதே ஹ்ருத்-கல்பிதம் க்ருஹ்யதாம்

ஸெளவர்ணே நவரத்ந கண்ட ரசிதே பாத்ரே க்ருதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பா பலம் பானகம்
ஸாகானாமயுதம் ஜலம் ருசிகரம் கற்பூர கண்ட உஜ்ஜ்வலம்
தாம்பூலம் மநஸா மயா விரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு

சத்ரம் சாமரயோர்யுகம் வ்யஜனகம் சாதர்ஸகம் நிர்மலம்
வீணா பேரி ம்ருதங்க கோஹலகலா கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதி: ஸ்துதி: பஹுவிதா ஹ்யேதத் ஸமஸ்தம் மயா
ஸங்கல்பேன ஸமர்ப்பிதம் தவ விபோ பூஜாம் க்ருஹாண ப்ரபோ

ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: ஸரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோக ரசனா நித்ரா ஸமாதி ஸ்திதி:
ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா-கிரோ
யத்-யத் கர்ம கரோமி தத்-தத் அகிலம் ஸம்போ தவ ஆராதநம்

கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண - நயநஜம் வா மானஸம் வாபராதம்
விஹிதம் - அவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ

ஸிவ மாநஸ பூஜா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.



Friday 10 June 2011

சோடச லட்சுமி சுலோகங்கள்..

1, தனலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
புஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

2, தான்யலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
சஷீதா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

3, வித்யாலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

4, வீரலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ரூதி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

5, ஸெளபாக்யலட்சுமி..

யாதேவீ ஸர்வபூதேஷு
துஷ்டி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

6, ஸந்தானலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
மாத்ரு ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

7, காருண்யலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
தயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

8, மஹாலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
மஹா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

9, சாந்திலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
சாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

10, கீர்த்திலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
கீர்த்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

11, சாயாலட்சுமி..


யாதேவீ ஸர்வ பூதேஷு
ச்சாயா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

12, ஆரோக்கியலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
காந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

13, த்ருஷ்ணாலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
த்ருஷ்ணா ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

14, சாந்தலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
ஷாந்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

15, விஜயலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
விஜய ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

16, சக்திலட்சுமி..

யாதேவீ ஸர்வ பூதேஷு
சக்தி ரூபேண ஸமஸ்த்திதா:
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை
நமஸ் தஸ்யை நமோ நம:

Wednesday 8 June 2011

நவக்கிரக சுலோகங்கள்..

சூரியன்..

ஜபா குஸும ஸங்காசம்
காச்ய பேயம் மஹாத்யுதிம்|
தமோரிம் ஸர்வ பாபக்நம்
ப்ரணதோஸ்மிதிவாகரம்||

சந்திரன்..

ததிசங்க துஷாராபம்
க்ஷிரோ தார்ணவ ஸம்பவம்|
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுட பூஷணம்||

செவ்வாய்..

தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத்காந்தி ஸமப்ரபம்|
குமாரம் சக்திஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்||

புதன்..

ப்ரியங்கு கலிகாச்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்|
ஸெளம்யம் ஸெளம்ய குணோ
பேதம் தம்புதம் ப்ரணமாம்யஹம்||

குரு..

தேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச
குரூம் காஞ்சன ஸந்நிபம்|
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்||

சுக்ரன்..

ஹிமகுந்த ம்ரூணா லாபம்
தைத்யா நாம் பரமம்குரும்|
ஸர்வ சாருஞூதரப்ரவக்தாரம்
பார்க்கவம் ப்ரணமாம்யஹம்||

சனி..

நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்||

ராகு..

அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்திராதித்ய விமர்தனம்|
ஸிம்ஹிகா கர்பஸம்பூதம்
தம்ராஹும்ப்ரணமாம்யஹம்||

கேது..

பலாஷ புஷ்ப ஸங்காஷம்
தாரகா க்ரஹ மஸ்தகம்|
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்||

Tuesday 7 June 2011

ஸ்ரீ ராமசந்த்ராஷ்டகம்.


ஸுக்ரீவ மித்ரம் ப்ரமம் பவித்ரம்
ஸீதா களத்ரம் நவமேக காத்ரம்
காருண்ய பாத்ரம் சதாபத்ர நேத்ரம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

ஸம்ஸார ஸாரம் நிகம ப்ரசாரம்
தர்மாவதாரம் ஸ்ருத பூமி பாரம்
ஸதா நிர்வகாரம் ஸுகஸிந்து ஸாரம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

லக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம்
பூதேவ வாஸம் சரதிந்து ஹாஸம்
லங்கா விஸாகம் புவன ப்ரகாசம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

மந்தார மாலம் வசனே ரஸாலம்
குணைர் விசாலம் ஹத ஸப்த ஸாலம்
க்ரவ்யாத காலம் ஸுர லோக பாலம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

வேதாந்த ஞானம் ஸகலே ஸமாநம்
ஹ்ருதாரி மானம் த்ருத ஸ ப்ரதானம்
கஜேந்த்ர யாநம் விகலா வஸாநம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

ச்யாமாபி ராமம் நய நாபி ராமம்
குணபி ராமம் வசஸாபி ராமம்
விஸ்வ ப்ரணாமம் க்ருத பக்த காமம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

லீலா சரீரம் ரணரங்க தீரம்
விஸ்வைக வீரம் ரகுவம்ஸ ஹாரம்
கம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி

கலேதி பீதம் ஸுஜநே விநீதம்
ஸாமோ பகீதம் ஸ்வகுலேப்ரதீதம்
தாராப்ர கீதம் வசநாத்வ யதீதம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி.

ஸ்ரீ ராமசந்த்ராஷ்டகம் ஸம்பூர்ணம்.