Tuesday 10 September 2013

ஸ்ரீ காமாக்ஷீ ஸ்தோத்திரம்


காஞ்சீ நூபுர ரத்ன கங்கண லஸத்
கேயூர ஹாரோஜ்வலாம்
காச்மீராருண கஞ்சுகாஞ்சித குசாம்
கஸ்தூரிகா சர்ச்சிதாம் னு
கல்ஹாராஞ்சித கல்பகோ ஜ்வலமுகீம்
காருண்ய கல்லோலினீம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

காமாராதி மன: ப்ரியாம் கமலபூ
ஸேவ்யாம் ரமாராதிதாம்
கந்தர்பாதிக தர்பகான விலஸத்
ஸெளந்தர்ய தீபாங்குராம்
கீராலாப வினோதினீம் பகவதீம்
காம்ய ப்ரதான வ்ரதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

காதம்ப ப்ரமதாம் விலாஸ கமனாம்
கல்யாண காஞ்சீ ரவாம்
கல்யாணாசல பாத பத்ம யுகளாம்
காந்த்யா ஸ்மரந்தீம் சுபாம்
கல்யாணாசல கார்முகப்ரியதமாம்
காதம்ப மாலாச்ரியாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

கந்தர்வாமர ஸித்தசாரண வதூம்
த்யாயேத்பதா காஞ்சிதாம்
கௌரீம் குங்கும பங்க பங்கித ருசாம்
த்வந்த்வாபி ராமாம் சுபாம்
கம்பீரஸ்மித விப்ரமாங்கித முகீம்
கங்காதராலிங்கிதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

விஷ்ணு ப்ரஹ்ம முகாமரேந்த்ர பரிஷத்
கோடீர பீடஸ்த்தலாம்
லாக்ஷ ரஞ்ஜித பாத பத்மயுகளாம்
ராகேந்து பிம்பானனாம்
வேதாந்தாகம வேத்ய சிந்த்ய சரிதாம்
வித்வஜ்ஜனைராவ்ருதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

மாகந்த த்ரும மூலதேச மஹிதே
மாணிக்ய ஸிம்ஹாஸனே
திவ்யாம் தீபித ஹேமகாந்தி நிவஹா
வஸ்த்ரா வ்ருதாம் தாம் சுபாம்
திவ்யா கல்பித திவ்யதேஹ பரிதாம்
த்ருஷ்டி ப்ரமோதார்பிதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

ஆதாராதி ஸமஸ்த சக்ரநிலயாம்
ஆத்யந்த சூன்யாமுமாம்
ஆகாசாதி ஸமஸ்தபூத நிவஹா
காராம் அசேஷாத் மிகாம்
யோகீந்த்ரைரபி யோகினீ சதகணை
ராராதிதா மம்பிகாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

ஹ்ரீங்கார ப்ரணவாத்மிகாம் ப்ரணமதாம்
ஸ்ரீ வித்யவித்யாமயீம்
ஐம் க்லீம் ஸெளம் ருசி மந்த்ர மூர்த்தி
நிவஹா காரா மசேஷாத்மிகாம்
ப்ரஹ்மானந்த ரஸானுபூத மஹிதாம்
ப்ரஹ்மப்ரியம்வாதினீம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

ஸித்தானந்த ஜனஸ்ய சின்மய ஸூகா
காரா மஹோயோகிபி
மாயா விச்வ விமோஹினீம் மதுமதீம்
த்யாயேத் சுபாம்ப்ராஹ்மணீம்
த்யேயாம் கின்னர ஸித்தசாரண வதூ
த்யேயாம் ஸதா யோகிபி
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

காமாரிகாமாம் கமலாஸனஸ்த்தாம்
காம்யப்ரதாம் கங்கண சூடஹஸ்தாம்
காஞ்சீ நிவாஸாம் கனக ப்ரபாஸாம்
காமாக்ஷீ தேவீம் கலயாமி சித்தே

ஸ்ரீ காமாக்ஷீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்



Thursday 7 February 2013

ஸ்ரீ சந்திரன் சுப்ரபாதம்

சூரியனுக்குத் தென்கிழக்கில் சதுரமான
ஆசனமிட்டு சுபக்கிரகமாய் அமர்ந்திருக்கும்
சுந்தரமுகத்தோனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்.

வலக்கரத்தில் கதையும் இடக்கரத்தில்
வரத முத்திரையும் கொண்டு முத்து
விமானத்தில் பவனி வரும்
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

பேரெழிலுக்கு முதன்மையானவனே
புதபகவானைப் புத்ரனாகப் பெற்றவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ஒரு முகம் கொண்ட எழில்
திருமுகத்தோனே மஞ்சள் கலந்த
வெள்ளை நிறத்தில்  அமிர்தமாய்
விளங்குபவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

வெண்ணிற ஆடைப் ப்ரியனே
முத்தை ரத்தினமாக கொண்டவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

வளமான வாழ்வும் சுகபோகமும்
தந்தருளும் சந்திரபகவானே எழுந்தருள்வாய்

இருளில் மிளிர்ந்து இதயத்துள் அமர்ந்து
வளர்ந்தும் தேய்ந்தும் அருள்பவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ஆயுள் விருத்தியை தந்து அற்புத
வாழ்வை தந்து அருள்பவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ஆயிரம் பிறை கண்டு ஆனந்தமாய்
நான் வாழ அருள்புரியும்
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

மனிதனின் ஜாதகத்தில் மாத்துர்காரனாக
நின்று அழகும் ஆடையும் ஆபரணமும் தந்து
அருள்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ரோஹினி ஹஸ்தம் திருவோணம்
நட்சத்திரத்துக்கு அதிபதியானவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

திருப்பதியை ஷேத்திரமாகக் கொண்டு
வெங்கடேசப் பெருமாளை மூர்த்தியாகக்
கொண்டவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ராஜசூய யாகம் செய்து நாராயணனின்
அருள் பெற்று தேஜோமயமாய்
திகழ்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

பத்து குதிரைத் தேரில்
இருசக்கிரங்கள் பூட்டி பவனிவரும்
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

அத்ரி புத்ரனே ஆத்ரேயனே
அமைதியான பார்வை கொண்டவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

பிரதி திங்களும் பௌர்ணமி நாளிலும்
விரதமிருந்து வெண் அலரி மலரால்
அர்ச்சித்து வணங்கிட நலம் உண்டாகும்.

பச்சரிசி பால்சாதம் நிவேதனம் செய்து
சந்ர பகவானுக்குரிய தான்யமான
நெல்லை தானம் செய்திட கார்ய சித்தியாகும்.

மூன்றாம் பிறையில் சந்த்ர தரிசனம்
செய்து வந்தால் ஆயுள் விருத்தியாகும்.

சந்திரனுக்கு உகந்த ஷேத்திரமான திருப்பதி
சென்று ஸ்ரீனிவாசப் பெருமாளை
தரிசித்தால் சர்வ ஜெயம் உண்டாகும்.

சரணம் சரணம் சந்ரபகவானே சரணம்
சரணம் சரணம் சோமனே சரணம்
சரணம் சரணம் லக்ஷ்மி சோதரனே சரணம்
சரணம் சரணம் சந்ரனே நின் பத மலரே சரணம்

சரணம் சரணம் சந்ரபகவானே சரணம்
சரணம் சரணம் சோமனே சரணம்
சரணம் சரணம் லக்ஷ்மி சோதரனே சரணம்
சரணம் சரணம் சந்ரனே நின் பத மலரே சரணம்





Monday 4 February 2013

ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற....



ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!





Monday 21 January 2013

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம்

அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு
ஒளிதந்து இருள்நீக்கி அருள் புரியும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு
நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
மங்கலக் குடியினில் மங்களமாய்க்
குடிகொண்டு மங்காத ஒளிவீசும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில்
பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சூர்யனார் கோவிலில் சுந்தரமாய்
வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை
அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு
அதிபதியானவனே சந்திரன் செவ்வாய்
பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே
 சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ
உன்திருமுகம் காட்டி அருள்புரியும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சனீஸ்வரரையும் தர்மராஜனையும் மகனாய்ப் பெற்றவனே
அஸ்வினிக்கும் யமுனைக்கும் தந்தையாய் நிற்பவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
தேரும் மயிலும் வாகனமாய்க் கொண்டவனே பாருலகம் போற்றும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
செந்நிற மேனியனே செந்தாமரைப் ப்ரியனே
இச்செகம் போற்றும் கதிரவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கண்ணால் காணும் கடவுள் நீ
கதிரொளி வீசும் கிரகமும் நீ
உன்னால் வாழும் உயிர்களைக் காக்க
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நாளையும் கோளையும் நம்பி வாழும்
இப்புவியில் நன்மைகள் பல புரியவே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
மனித ஜாதகத்தில் பிதுர்காரகனாக விளங்கி
தைரியம் வெற்றி அனுகூலம் யாவும் தந்தருள்பவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
விழியில் ஒளிதந்து புவியில்
புகழ்தந்து நல்வாழ்வு நல்கிடும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
வான் மழை பொழிந்திட பயிர்கள்
விளைந்திட வையகம் தழைத்திட
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சூர்ய நமஸ்காரம் சர்வரோக நாசனம்
சூர்ய பகவானுக்கு ப்ரதி ஞாயிறன்று
விரதமிருந்து செந்தாமரை மலர்களால்
அர்ச்சித்தால் நலம் உண்டாகும்
சூர்யனின் வாகனமான மயிலுக்கு உணவளித்து
சூர்யனுக்கு உவந்த தானியமான கோதுமையை
செப்புப் பாத்திரத்திலிட்டு தானம் செய்து
சிவசூர்யநாராயணன் தாழ்பணிந்தால் கார்யசித்தியாகும்
சூர்யபகவானின் ஷேத்ரமான சூர்யனார் கோவில் சென்று
சிவசூர்யநாராயணனுக்கு செந்நிற ஆடை
அணிவித்து அபிஷேக ஆராதனை செய்து
வழிபட்டால் சர்வ ஜெயம் உண்டாகும்
சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்
சரணம் சரணம் ஆதித்யனே சரணம்
சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்
சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்
சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்
சரணம் சரணம் ஆதித்யனே சரணம்
சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்
சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்