Sunday 30 December 2012

கணேச பஞ்சரத்னம்

கணேச பஞ்சரத்னம்



முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்

ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்

அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்

மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.

இதி ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் சம்பூர்ணம்.



Monday 24 December 2012

குரு என்னைப் பார்ப்பார்

சீடர் ஒருவர் சிறுவயதிலிருந்தே தன் குருவிற்கு சேவை செய்து வந்தார். ஏதோ ஒரு காரணத்தால் அவருக்குக் கண் பார்வை மங்கியது. இருந்தாலும் தொடர்ந்து தன் பணியைச் செய்து வந்தார்.

ஒருநாள் உணவுடன் வரும்பொழுது கால் தவறி விழுந்துவிட்டார். அதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் "ஐயா தங்களுக்குக் கண் தெரியவில்லை. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பணியை நாங்கள் செய்கிறோம்" என்றனர்.

சீடர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. "ஐயா என்னால் என் குருவை தரிசிக்க முடிவதில்லை. ஆனால் அவர் என்னைப் பார்ப்பார் இல்லையா? அவருடைய அருட்பார்வை என்மேல் விழும் இல்லையா? அதற்காககத்தான் இங்கு வருகிறேன்" என அவர் கூறியதைக் கேட்டனர். மற்ற சீடர்கள் அவரது குருபக்தியைப் போற்றினர்.