Sunday 28 February 2010

ஸ்ரீ காயத்ரி மந்திரம்


ஸ்ரீ காயத்ரி மந்திரமானது இருக்கு வேதத்திலும் , கிருஷ்ண யசுர் வேதத்திலும், சுக்கில யசுர் வேதத்திலும், சாம வேதத்திலும், பிருஹதாரண்யக உபநிடதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்"
என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார்.

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

வேத மந்திரங்களின் சாரமாக விளங்குவது காயத்ரி மந்திரம். மந்திரங்களி லெல்லாம் ஒப்புயர்வற்றது காயத்ரியே.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.

காயத்ரி மந்திரம்:-

"ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"

"யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக' என்பது இதன் பொருள்.

நிமிர்ந்து உட்கார்ந்து, காலையில் கிழக்கு முகமாகவும், நண்பகலில் வடக்கு அல்லது கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

ஸ்ரீ காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் முறை :-

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களும் காயத்ரி மந்திரதில் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

காயத்ரி மந்திரத்தை அம்பாள் சன்னதியில் அமர்ந்து ஜபித்தால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை...!!!

பூஜைக்குரிய மலர்கள் - 03



ரோஜா
தாவரவியற் பெயர் :- Rosa damascena.

சரணாகதி என்பது இறைவனிடம் தன்னையே ஒப்புவித்துக் கொண்டு விடுவது.

இந்த உடம்பு ஈசனின் உறைவிடம்(ஆலயம்) என்பதை உணர்ந்து விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

ரோஜா எந்த நிறத்தில் இருந்தாலும் அழகானது தான், அதன் மணம் எந்த அளவில் இருந்தாலும் அது இறைவனின் அன்பை எமக்குப் பெற்றுத்தரும்.

இளஞ்சிவப்பு ரோஜா

இளஞ்சிவப்பு ரோஜா கொண்டு இறைவனைப் பூஜிக்கும் போது நமக்கு நல்லது, கேட்டது நமக்கு புலனாகும். நிறைகள் வளரும், குறைகள் அகன்றுவிடும்.

வெள்ளை ரோஜா

வேலை தேடுவோருக்கு நேர்முக தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற அச்சம். வேலை சரியில்லை என்ற கிரக பயம். வறுமை பயம், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியுமோ என்ற பயம். எதிலும் அச்சம், எப்பொதும் அச்சம் மீள வழியே இல்லையா என்று வேதனைபடுபவர்கள், வெள்ளை ரோஜாக்களால் இறைவனை வழிபட அச்சம் பறந்தோடும் , தைரியம் கொடிகட்டும், பகைவரும் நண்பராவர்.

வெள்ளை ரோஜாவின் தன்மை அப்படி. அது இனிமையானது தன்னம்பிக்கை அழிப்பது.

மஞ்சள் ரோஜா

தொலைந்து போன நிம்மதியை திரும்ப பெற வேண்டுமா? ரோஜாவை இறைவனுக்கு சமர்ப்பியுங்கள்.

பொறாமை, பகைமை, காரணமாக மனதில் ஏற்படும் நெருடலில் குடும்ப மகிழ்ச்சி காணாமல் போய்விடும். குரோதம் தொலைந்து கணவன், மனைவி குதூகலத்துடன் வாழ்ந்திட ரோஜா கொண்டு இறைவனை வணங்க வேண்டும்.


சிவப்பு ரோஜா

இந்துக்கள் ஊழ்வினையில் நம்பிக்கை உள்ளவர்கள், இன்றைய துன்பம் நேற்றைய தவறுகளின் விளைவு என்று எண்ணுவோம், வாழ்வின் கர்மவினைகள் நீங்கி விட்டால் நாம் புது மனிதராவோம், நமது வாழ்வும் புது வாழ்க்கை ஆகிவிடும்.கர்ம வினைகளில் நம்பிக்கை உடையவர்கள். சிவப்பு ரோஜா கொண்டு இறைவனை அர்ச்சிக்க, கர்மவினைகள் நீங்கி பேரானந்தம் வந்தடையும்.


படியுங்கள், பயன்படுத்துங்கள், பயனடையுங்கள்..!!

எல்லாம் இறைவன் அருள்.

விசிஷ்டாத்வைதம் நிறுவிய ராமானுஜர்.


சங்கரருக்குப் பின்னால் அவதரித்தவர் ‘ராமானுஜர். இவர் விசிஷ்டாத்வைதம்’ என்ற சித்தாந்தத்தை நிறுவினார். ‘உலகம் மாயை! பிரம்மம் ஒன்றே சத்தியமானது’ என்பது அத்வைத சித்தாந்தம் அதில் சில மாறுபாடுகளைக் கொண்டது விசிஷ்டாத்வைதம். ‘திருமாலே முழுமுதற் கடவுள் என்று போதித்தார் ராமானுஜர். இவர் வைணவத்துக்கு ஆற்றிய திருத்தொண்டுகள் மகத்தானவை.

ஆதியில், ‘தேவலர்கள் என்ற அந்தணப் பிரிவினர் மட்டுமே, விஷ்ணு ஆலயங்களில் அர்ச்சகர்களாக இருந்தனர். அவர்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய ‘பஞ்ச சம்ஸ்காரம்’ என்னும் வைணவ தீக்கையை, திருமாலடியார்கள் அனைவர்க்கும் பொதுவாக்கினார் ராமானுஜர். ‘நாராயண நாமத்தைச் சொன்னால் எவருக்கும் வைகுண்டம் உண்டு’ என்று திருக்கோஷ்டியூர் விமானத்தில் ஏறி நின்று, உலகத்தோர் அனைவர்க்கும் உபதேசித்த கருணையாளர் ராமானுஜர்.

அத்வைதம் காட்டித் தந்த ஆதி சங்கரர்.


அத்வைதத்தின் அடிப்படையில் ‘அறுவ கைச் சமய நெறி’களை சங்கரர் அறிமுகப் படுத்தினார்.

அவையே, ‘சைவம், வைணவம், சாக்தம், கொமாரம், காணாபத்யம், சொரம்’ எனப்படுகின்றன. முறையே சிவ பெருமான், திருமால், பராசக்தி, முருகக் கடவுள், விநாயகர், சூரியன் ஆகியோரை முழு முதற்கடவுளராக அறுவகைச் சமயப் பிரிவுகள் வரையறுக்கின்றன.

அந்த வகையில் ‘ஷண் மதம்’ எனப்படும் ஆறு வித வழிபாட்டு நெறிகள் மிகவும் அழகானவை.

ஒவ்வொருவரின் ரசனையும் ஒவ்வொரு வகைப்படும். அதனால், ‘இவர் மட்டுமே உனக்குக் கடவுள்’ என்று எந்தவொரு இநதுவையும் கட்டாயப்படுத்தாமல், ‘இந்த அறுவரில் எவர் உன் மனதைக் கவர்கின்றாரோ, அவரையே முழு முதற் கடவுளாக நீ போற்றலாம்’ என்று வழி காட்டுகிறது அத்வைதம்.

அது மட்டுமின்றி, ‘உன்னுடைய இஷ்ட தெய்வமே மற்ற கடவுளராகவும் வடிவம் தாங்கி நிற்கின்றது என்ற உண்மையையும் இந்தச் சித்தாந்தம் சொல்லித் தருகிறது.

இதனால் ஒரே மதத்தில் இருந்து கொண்டு, அதே மதத்திலுள்ள இன்னொரு கடவுளை இழித்துரைக்கும் பாவத்தையும் தடுக்கிறது.

ஆறு விதமான தெய்வ வழிபாடுகளைக் காட்டித் தந்த ஆதி சங்கரர், அந்தந்தத் தெய்வங்களைப் போற்றுவதற்கான துதிக ளையும் தானே இயற்றித் தந்தார்.

அவர் பாடாத கடவுளரே இல்லை எனலாம்.

Friday 26 February 2010

பூஜைக்குரிய மலர்கள் - 02


செந்தாமரை மலர்
தாவரவியற் பெயர் :- Nelumbium Speciosum

மலரின் பண்பு

வெண்தாமரையைப் போன்றே நீரில் வளரும். சிவப்புநிறப்பூக்களையுடையது. செந்தாமரை இதயத்திற்கு வலிமை தரும், இரத்தக் கொதிப்பை குணமாக்கும்.

அன்னை மஹாலக்ஸ்மிதேவியின் அருளைபெற செந்தாமரை மலர் கொண்டு பிரார்த்தனை செய்யவும். அது அன்னைக்கு உகந்த மலர், அன்னைக்கு பிரியமானதை அற்பணிக்கும் பொது நாம் அன்னைக்கு பிரியமானவர் ஆகிவிடுவோம் அல்லவா?

பலன்

செந்தாமரையைக் கொண்டு இறைவனைப் பூஜிக்கும் போது நமக்கு புது உணர்வுகளும், புதுத் தெம்பும் ஏற்படும்.

படியுங்கள், பயன்படுத்துங்கள், பயனடையுங்கள்..!!

எல்லாம் இறைவன் அருள்.

Wednesday 24 February 2010

பூஜைக்குரிய மலர்கள் - 01


வெண் தாமரை மலர்
தாவரவியற் பெயர் :- Nelumbium Alba

மலரின் பண்பு


நீரில் விளையும் மலர். இலைக்காம்பு பூக்காம்பை விட அதிக நீளமாகும். பூ மருத்துவ குணமுடையது. காம்புகள் துவர்ப்பும் குளிர்ச்சியும் உடையவை.

இந்தப்பூ வெப்பத்தால் பிறந்த விழி எரிச்சலை, ஜுரத்தைப் போக்கும். ஆண்மையின்மையை நீக்கும். இரத்தக்கொதிப்பை அகற்றும். மூளைக்குப் பலம் சேர்க்கும்.

வெண்தாமரை வேர்க்கட்டுள்ள கிழங்கிலிருந்து நேராக வளரும் நீர்க்கொடி. வட்டமான பெரிய இலைகளை நீர்ப்பரப்பில் பெற்றிருக்கும். பெரிய மலர்களை உடையது. வெண்ணிற மலர்கள்.

பலன்

வெண்தாமரையைக் கொண்டு இறைவனைப் பூஜிக்கும் போது நமது தெய்வீக உணர்வு மேம்படும். மேனி பொலிவடையும். மனதில் உள்ள மாசுக்கள் அகன்று விடும். பெருமிதப்படுகின்ற வண்ணம் ஆற்றல் பெறுவோம்.

படியுங்கள், பயன்படுத்துங்கள், பயனடையுங்கள்..!!

எல்லாம் இறைவன் அருள்.

Tuesday 23 February 2010

பூஜைக்குரிய மலர்கள்...


மலர்களே! உங்கள் ஜனனம்
மகிமையுறும் இறைவனின் பாதங்களில்
அர்ச்சிக்கப்படுகிறபோது...!


வானை நோக்கி வளர்கிறது மரம். அது ஒளியின் மீது கொண்ட நாட்டத்தின் அழகான குறியீடு மலர்.

ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உண்டு, மணம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு மலருக்கும் தனித்தனிக் குணம் உண்டு என்கிறது ஆன்மிகம்.

நமது உடலுக்குப் பலமும், மனதுக்கு நலமும், வாழ்வுக்கு வளமும் சேர்க்கிற ஆற்றல் மலருக்கு உண்டு.

மலர் தூவி இறைவனை வழிபடுங்கள், நீங்கள் எண்ணியனவெல்லாம் இயன்றிவிடும்.

இங்கு பலவகை மலர்களும் அவற்றின் மூலம் பெறக்கூடிய பயன்களும் பற்றித் தொடர்ந்து தர உள்ளேன்.

படியுங்கள், பயன்படுத்துங்கள், பயனடையுங்கள்..!!

எல்லாம் இறைவன் அருள்.

Sunday 21 February 2010

அஷ்டமா சித்துக்கள்

1. அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
2. மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
3. இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
4. கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
5. பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.
6. பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்.
7. ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
8. வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

நாயன்மார்கள் அறுபத்துமூவர்..

சிவநெறி பூண்ட நாயன்மார்கள்

முற்காலத்தில் (~கி.பி 400-1000) தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார்கள் எனப் போற்றப்படுகின்றார்கள். இவர்கள் அறுபத்துமூவராவர்.

1 அதிபத்தர்


2 அப்பூதியடிகள்


3 அமர்நீதி நாயனார்


4 அரிவட்டாயர்


5 ஆனாய நாயனார்


6 இசைஞானியார்


7 இடங்கழி நாயனார்


8 இயற்பகை நாயனார்


9 இளையான்குடிமாறார்


10 உருத்திர பசுபதி நாயனார்


11 எறிபத்த நாயனார்


12 ஏயர்கோன் கலிகாமர்


13 ஏனாதி நாதர்


14 ஐயடிகள் காடவர்கோன்


15 கணநாதர்


16 கணம்புல்லர்


17 கண்ணப்பர்


18 கலிய நாயனார்


19 கழறிற்ற்றிவார்


20 கழற்சிங்கர்


21 காரி நாயனார்


22 காரைக்கால் அம்மையார்


23 குங்கிலியகலையனார்


24 குலச்சிறையார்


25 கூற்றுவர்


26 கலிக்கம்ப நாயனார்


27 கோச் செங்கட் சோழன்


28 கோட்புலி நாயனார்


29 சடைய நாயனார்


30 சண்டேஸ்வர நாயனார்


31 சத்தி நாயனார்


32 சாக்கியர்


33 சிறப்புலி நாயனார்


34 சிறுதொண்டர்


35 சுந்தரமூர்த்தி நாயனார்


36 செருத்துணை நாயனார்


37 சோமசிமாறர்


38 தண்டியடிகள்


39 திருக்குறிப்புத் தொண்டர்


40 திருஞானசம்பந்தமூர்த்தி


41 திருநாவுக்கரசர்


42 திருநாளை போவார்


43 திருநீலகண்டர்


44 திருநீலகண்ட யாழ்ப்பாணர்


45 திருநீலநக்க நாயனார்


46 திருமூலர்


47 நமிநந்தியடிகள்


49 நின்றசீர் நெடுமாறன்


50 நேச நாயனார்


51 புகழ்சோழன்


52 புகழ்த்துணை நாயனார்


53 பூசலார்


54 பெருமிழலைக் குறும்பர்


55 மங்கையர்க்கரசியார்


56 மானக்கஞ்சாற நாயனார்


57 முருக நாயனார்


58 முனையடுவார் நாயனார்


59 மூர்க்க நாயனார்


60 மூர்த்தி நாயனார்


61 மெய்ப்பொருள் நாயனார்


62 வாயிலார் நாயனார்


63 விறன்மிண்ட நாயனார்

ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகள்...

ஆறுபடை வீடுகள்

1. திருப்பரங்குன்றம்
2. திருச்செந்தூர்
3. பழனி
4. சுவாமி மலை
5. திருத்தணி
6. பழமுதிர்ச்சோலை

இவைகளே ஆறுபடை வீடுகள்.

ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள்

அருணகிரிநாதர் அவருடைய பாடலில் ஆறுபடை வீடுகளை, ஆறு திருப்பதி எனக் குறிப்பிடுகிறார். ஆறுபடை வீடுகளுக்கு பல தத்துவ விளக்கங்களை அளிக்கிறார். நம் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் விளக்க இடங்கள் என்பதாகும்.

1. திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
2. திருச்செந்தூர் - சுவாதிட்டானம்
3. திருஆவினன்குடி (பழனி) - மணிபூரகம்
4. திருஏரகம் (சுவாமிமலை) - அநாகதம்
5. பழமுதிர்ச்சோலை - விசுத்தி
6. குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை

மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர்.

ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும். வளமான வாழ்க்கை அமையும்.

பன்னிரு ஆழ்வார்கள்..

இந்த ஆழ்வார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் போற்றிப் பணிந்ததெல்லாம் ஒரே பரமனைத்தான். இந்த ஆழ்வார்கள் திருமாலின் அம்சமாகவே கருதப்படுகின்றனர். பெருமானைப் போற்றுவதும், மங்களாசாஸனம் செய்வதுமே அவர்களின் வாழ்க்கை முறையாக அமைந்தது. இப்பன்னிருவரில்

"மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்"
என்று கண்ணனைச் சரணடைந்த ஸ்ரீ ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.

1) பொய்கை ஆழ்வார்
2) பூதத்தாழ்வார்
3) பேயாழ்வார்
4) திருமழிசை ஆழ்வார்
5) நம்மாழ்வார்
6) திருமங்கையாழ்வார்
7) தொண்டரடிப் பொடி ஆழ்வார்
8) பெரியாழ்வார்
9) ஸ்ரீ ஆண்டாள்
10) குலசேகர ஆழ்வார்
11) மதுரகவி ஆழ்வார்
12) திருப்பாணாழ்வார்

இவர்களுள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் மூவரையும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பது வழக்கம்.

Saturday 20 February 2010

சிவசின்னங்கள்

திருநீறு, உருத்திராக்கம் இவை இரண்டும் சிவசின்னங்கள் எனப்படும்.

திருநீறு

திருநீறு இந்துசமயத்தின் சிறந்த பிரசாதங்களில் முதன்மைவகிப்பதாகும். இது சமயத்தின் தோற்ற ஒழுக்க முறையுண்மைகளும் கிராமததுவங்கட்கும், முப்பொருள் உண்மைக்கும் அறிகுறியாய் அமைவது. மூன்று விரல்களால் இடப்படும் திருநீற்றின் மூன்று கோடுகளும் சிந்தனை , சொல், செயல் என்ற திரிசத்தியங்களைக் கூறுகின்றது. முடிவில் யாவரும் சாம்பல் ஆவர் என்ற நிலையான உண்மையை திருநீறு உணர்த்துகின்றது. மேலும் தூய்மையும் வெண்மையுமான நீறு போல் நமது உள்ளம் தூய்மையாகவும் ஞான ஒளி உடையதுமாக இருத்தல் வேண்டும் என்பதையும் காட்டுகின்றது.
பசுவின் (ஜீவனின்) மலமாம் ஆணவம், கன்மம், மாயை என்ற தீயில் (ஞானத்தீயில்) நீறுகின்றன என்ற தத்துவத்தையும் இது வெளிப்படுத்துகின்றது. இதை ஒட்டியே சம்பந்தபெருமாள்...

"மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே... "

என அருளியுள்ளார்.


"நீறில்லா நேற்றி பாழ்" என்பது பழமொழி. சாணம் அசுத்தங்களையும் நோய் கிருமிகளையும் அகற்றும் என்பது யாவரும் அறிவர். சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு தலையில் உள்ள நீர்க்கட்டு, தலைவலி, உடம்பிலுள்ளகிருமிகள் முதலியவற்றை அகற்ற வல்லது.
திருநீறு அணியும் போது வடக்கு முகமாகவோ கிழக்கு முகமாகவோ அண்ணாந்து "சிவ சிவ" என்று சொல்லிக்கொண்டு அணிய வேண்டும்.திருநீற்றுக்கு வீபூதி, இரட்சை, சாரம், பசிதம் என்பன மறு பெயர்களாகும்.


உருத்திராக்கம்
உருத்திர + அக்கம் = உருத்திர மூர்த்தியாகிய சிவபெருமானின் திரு நேத்திரங்களில் தோன்றிய கண்மணிகள் என்பது பொருள். திரிபுரத்து அசுரர் செய்த கொடுமைகளை தேவர்கள் சிவபெருமானிடம் சொன்ன போது அவரின் திரி நேத்திரங்களில் இருந்து ஒழுகிய நீர்த்துளிகள்.

இதனை கண்மணி மாலை, திரு அடையாள மாலை அக்கு மணி என்றெல்லாம் அழைப்பர். அக்குமாலை இறைவன் தன பக்தர்கள் மீது வைத்த கருணையால் அவர்கட்கு எதிரிகள் கொடுக்கும் துன்பங்களை வடித்த கண்ணீரின் தொகுப்பு.திரவநிலையில் இருந்து, திடமான அமைப்பாய் அக்குமணி ஆனதேன்பர்.

நல்ல உத்திராக்கம் பசும்பொன்னின் நிறத்தை ஒத்திருப்பதை காணலாம். இது சிவபெருமானின் அருளைக்குறிப்பதால்மாலையாக அணிந்து ஜெபித்தால் தெய்வசக்தி வளரும். உருத்திராக்கம் உடலில் அணிவதால் இரத்தக்கொதிப்பு முதலிய நோய்கள் நீங்கும்.

"ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு "


விநாயகர் அஷ்டோத்தரம்



ஓம் விநாயகாய நம
ஓம் விக்நராஜாய நம
ஓம் கௌரீ புத்ராய நம
ஓம் கணேச்வராய நம
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பூதாய நம
ஓம் தக்ஷாய நம
ஓம் அத்யக்ஷாய நம
ஓம் த்விஜப்ரியாய நம
ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம
ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம
ஓம் வாணீப்ரதாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம
ஓம் சர்வநயாய நம
ஓம் சர்வரீப்ரியாய நம
ஓம் ஸர்வாத்மகாய நம
ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம
ஓம் தேவாய நம
ஓம் அநேகார்சிதாய நம
ஓம் சிவாய நம
ஓம் சுத்தாய நம
ஓம் புத்திப்ரியாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ப்ரஹ்மசாரிணே நம
ஓம் கஜாந நாய நம
ஓம் த்வை மாத்ரேயாய நம
ஓம் முநிஸ்துத்யாய நம
ஓம் பக்தவிக்நவி நாசகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் சதுர் பாஹவே நம
ஓம் சதுராய நம
ஓம் சக்திஸம்யுதாய நம
ஓம் லம்போத ராய நம
ஓம் சூர்பகர்ணாய நம
ஓம் ஹரயே நம
ஓம் பிரஹ் மவிதுத்தமாய நம
ஓம் காலாய நம
ஓம் க்ரஹபதயே நம
ஓம் காமிநே நம
ஓம் ஸோமசூர்யாக்நிலோசநாய நம
ஓம் பாசாங்குச தராய நம
ஓம் சண்டாய நம
ஓம் குணாதீதாய நம
ஓம் நிரஞ்ஜநாய நம
ஓம் அகல் மஷாய நம
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம
ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம
ஓம் பீஜ பூர பலா ஸக்தாய நம
ஓம் வரதாய நம
ஓம் சாக்வதாய நம
ஓம் க்ருதிநே நம
ஓம் த்விஜப்ரியாய நம
ஓம் வீதபயாய நம
ஓம் கதிநே நம
ஓம் சக்ரிணே நம
ஓம் இக்ஷúசாபத்ருதே நம
ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் அஜாய நம
ஓம் உத்பலகராய நம
ஓம் ஸ்ரீ பதயே நம
ஓம் ஸ்துதிஹ்ஷிதாய நம
ஓம் குலாத்ரிபேத்ரே நம
ஓம் ஜடிலாய நம
ஓம் கலிகல் மஷநாசகாய நம
ஓம் சந்த்ர சூடாமணயே நம
ஓம் காந்தாய நம
ஓம் பாபஹாரிணே நம
ஓம் ஸமாஹிதாய நம
ஓம் ஆச்ரி தச்ரீகராய நம
ஓம் ஸெளம்யாய நம
ஓம் பக்தவாஞ்சி தாயகாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் கைவல்யஸுகதாய நம
ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம
ஓம் ஜ்ஞாநிநே நம
ஓம் தயாயுதாய நம
ஓம் தாந்தாய நம
ஓம் ப்ரஹ்மத்வேஷவிவர்ஜிதாய நம
ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம
ஓம் ஸ்ரீ கண்டாய நம
ஓம் விபுதேச்வராய நம
ஓம் ரமார்ச்சிதாய நம
ஓம் விதயே நம
ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதகாய நம
ஓம் ஸ்தூலகண்டாய நம
ஓம் ஸ்வயம் கர்த்ரே நம
ஓம் ஸாமகோஷ ப்ரியாய நம
ஓம் பரஸ்மை நம
ஓம் ஸ்த்தூல துண்டாய நம
ஓம் அக்ரண்யை நம
ஓம் தீராய நம
ஓம் வாகீசாய நம
ஓம் ஸித்திதாயகாய நம
ஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம
ஓம் அவ்யக்த மூர்த்தயே நம
ஓம் அத்புதமூர்த்திமதே நம
ஓம் சைலேந்த்ரநுஜோத்ஸங்க நம
ஓம் கேலநோத்ஸுகமா நஸாய நம
ஓம் ஸ்வலாவண்ய நம
ஓம் ஸுதாஸாராய நம
ஓம் ஜிதமந்மத விக்ரஹாய நம
ஓம் ஸமஸ் தஜகதா தாராய நம
ஓம் மாயிநே நம
ஓம் மூஷிகவாஹ நாய நம
ஓம் ஸ்ருஷ்டாய நம
ஓம் துஷ்டாய நம
ஓம் பிரஸந் நாத்மநே நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நம

விநாயகர் அஷ்டோத்தரம் முற்றும்

சிந்திக்க..





மனிதன் மனிதனுக்கு சொன்னது - திருக்குறள்,

மனிதன் கடவுளுக்கு சொன்னது - திருவாசகம்,
கடவுள் மனிதனுக்கு சொன்னது - பகவத் கீதை.


லிங்காஷ்டகம் (சமஸ்கிருதத்தில்)

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்


தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யே படேத் சிவ சன்னிதௌ
சிவலோகம் அவாப்நோதி
சிவே ந ஸஹமோததே..

Friday 19 February 2010

துக்க நிவாரண அஷ்டகம்...

மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் களிமுகம் கொண்டநல் கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

கான் உறுமலர் எனக் கதிர் ஒளிகாட்டிக் காத்திட வந்திடுவாள்
தான் உறு தவஒளி தார்ஒளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
மான் ஊறு லிழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

தணதண தந்தண தவில் ஒலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுபாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

துக்க நிவாரண அஷ்டகம் முற்றும்.....

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்
எழுதியவர்: ஔவையார்



சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)